பக்கம் எண் :

205

பந்தம் இருந்தது என்பதையும் நன்றாய் அறிவாய்! ஆயினும் அக் குழந்தையை உண்டாக்கியவர் மாத்திரம் கடவுள் என்பதுதான் உனது நம்பிக்கை. சந்தோஷம் தான்! உன்னுடைய இந்த நம்பிக்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறாதிருக்க வேண்டும். ஆனால் அதே பிரசவ அறையில் இன்னொரு நாள் தகவலில்லாமல் இன்னொரு பிள்ளையை நீ கண்டாயானால், அது மற்றொருவன் பெற்றதென்றும், வளர்க்க முடியாமல் என் தலையில் கட்ட நினைத்து இருக்கிறான் என்றும், நான் இதைப் பெறவில்லை என்றும் நீ சொல்வாய் என்பதிற் சந்தேகம் இல்லை. இது மாத்திரமா? கடவுள் என்பதாக ஒன்று வந்து உன் காதில், ‘அந்தப் பிள்ளை நமது சிருஷ்டி; ஆகையால், அதை நீ ஒப்புக் கொள்’ என்று சொன்னாலும், ‘முடியாது, முடியாது; அது நான் பெற்றதல்ல, நான் பெற்றது எனக்கிருக்கிறது!’ என்றுதான் சொல்லுவாய் என நம்புகிறேன். ஆனால் அந்தச் சந்தர்ப்பதில் நீ அப்படிச் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஏனென்றால், உன்னால் ஏற்பட்ட பிள்ளைக்கு உன் சொத்துச் சேரவேண்டியதும், உன் பிள்ளைக்காக நீ உழைப்பதில் நீ குஷால் அடைவதும் ஞாயம். ஆனால் ஒன்று! நீயும் உன் மனைவியும் உண்டாக்கிய உனது பிள்ளை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ முன், நம்பியதானது இவ்விடத்தில் ஆட்டங்கொடுக்க வில்லையா? ஆனால் உன் சொத்து, ஸ்வாதீனம் ஆகிய நன்மையைப் பாதிக்காத முறையில் மேலோடு உன் பிள்ளையைக் ‘கடவுள் சிருஷ்டி’ என்று நீ சொல்லுவதில் ஒன்றும் ஆக்ஷேபணையில்லை.

நீயும், உன் மனைவியும் உண்டாக்கிய பிள்ளையைக் கடவுள் உண்டாக்கியது என்று நீ அங்கு தடையின்றி கூறுவதற்குப் பிரதான காரணம் மற்றொன்று உண்டு. நீ தந்த பிள்ளையை இன்னொருவன் தந்தான் என்று இன்னொரு அறிந்த மனிதனைக் குறிக்கும்போது உனக்குக் கோபம் பொங்குவதும், அதை நீ மறுக்க முற்