சிங்கடியார் உரைசெய் கோடி கீர்த்தியினும் ஒன்றே அமையும் உயர்சீர்த்தி தரைசெய் நீதிக் கோட்புலியார் தந்த மகளே தன்மகவாய்ப் பரசும் ஊரன் தேவாரப் பதிகம் தோறும் பதித்தபுகழ் வரிசை உடைய சிங்கடியார் வளம்சேர் சோழ மண்டலமே | 23 |
சுந்தரர் தலயாத்திரை செய்யவென்று எண்ணித் திருநாட்டியத் தான்குடியை அடைந்த பொழுது கோட்புலியார் அவரை வரவேற்று உபசரித்தார். தாம் அருமையாக வளர்த்துவந்த சிங்கடியார், வளப்பகையார் என்னும் இரு மகளிரையும் சுந்தரர்க்கு மகட்கொடையாக அளித்தார். அவர்களைத் தம் மடிமீது இருத்தித் தம் மகளிராகப் பாவித்தார். சுந்தரர் தம்மை அவ்வூர்ப் பதிகத்தில் ‘சிங்கடியப்பன்’ என்று அழைத்துக் கொண்டார். |