எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான் விண்புக்கான் தண்புகார் வேந்து என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779). உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல் எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன் கண்கொள்ளக் கண்ட கரை என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 2154). கரிகாலனைப் பொன்னிக் கரைகண்ட பூபதி என்று விக்கிரம சோழன் உலாவும் [13] மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் என்று குலோத்துங்க சோழன் உலாவும் [18] தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் என்று கலிங்கத்துப் பரணியும் (இராசபாரம்பரியம் 20) ஈரருகும் எண்கரை செய்யாது எறிதிரைக் காவிரிக்குத் தண்கரை செய்த தராபதி என்று சங்கர ராசேந்திர சோழன் உலாவும் [13] கூறுகின்றன. கரைகட்ட ஈழத்திலிருந்து பிடித்து வந்த கைதிகளைப் பயன்படுத்தினான் என்பர். முனையதரையன் புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொரிக்கறியும் அனைய சவுரி ராசருக்கே ஆம்என்று அருந்தும் ஆதரவின் முனைய தரையன் பொங்கல்என்று முகுந்தற்கு ஏறு முதுகீர்த்தி | |
|