பக்கம் எண் :

50சோழமண்டல சதகம்

குடந்தை மருதன்

தாழப் புதைக்கும் திருத்தங்கித்
          தடங்கா வாழை தனிபழுப்பப்
பாழிப் புயமா மலைமருதன்
          பலர்க்கும் உதவும் பான்மையினால்
காழில் பொலியும் இலையரிதாய்க்
          காயும் அரிதாய்க் கனியுமின்றி
வாழைக் குருத்தும் கிடையாத
          வளம்சேர் சோழ மண்டலமே
68

கும்பகோணத்தில் திருத்தங்கி, மருதன் என இருவர் வாழ்ந்து வந்தனர். திருத்தங்கி கஞ்சன், மருதன் கொடையாளி, ஒளவையார் மருதனைப் புகழுமுகத்தான் ஒரு வெண்பாப் பாடினார்.

செல்வத்தைப் புதைத்து வைக்கும் திருத்தங்கி வீட்டு வாழை மரத்திலேயே பழுத்துள்ளது. ஆனால் மருதன் வீட்டு வாழையிலோ குருத்து, பூ, காய், கனி எதுவும் இல்லை. ஏனென்றால் அவை பலர்க்கும் உதவின என்றார் ஒளவையார்.

திருத்தங்கி தன்வாழை தேன்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தொன்று
இலையுமி்லை பூவுமிலை காயுமிலை என்றும்
உலகில்வரு விருந்தோடு உண்டு

என்பது அப்பாடல்.