87 | நகரத் தாறு மநுடத் தடைவே யேனை யாறுங் கேட்டைபூ ரட்டாதி. | (7) |
| | |
88 | 1பத்திய பகரத் தொருநான் கிரண்டா றுத்திர மத்தஞ் சித்திரை யாகும். | (8) |
| | |
89 | மகரத் தாறு மூன்று மூன்று மகமா யிலியம் பூர மாகும். | (9) |
| | |
90 | யாவே யுத்திரட் டாதி யேனை யூயோ மூலமென் றுணர்ந்திசி னோரே. | (10) |
| | |
91 | யூயோ விரண்டு மேனாண் மூலம் யாவே யுத்திரட் டாதிநாள் பெறுமே. | (11) |
| | |
92 | ஒருநான் குரோகணி வகர மவ்வகை மற்றை நான்கு மகசிர மாகும். | (12) |
| | |
93 | 2மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தே ழட்டம ராசி வைநா சியக்கால் விட்டனர் பின்னர் மேவினர் கொளலே. | (13) |
| | |
94 | இரண்டீ ரிரண்டா றெட்டொன் பானெனத் திரண்ட நாளே செல்வம் புகுதரும். | (14) |
| | |
95 | நன்மை பொருள்பே றின்பந் தருமெனத் தொன்னெறிப் புலவ ருரைத்தனர் துணிந்தே. அவை, -மூவகை யொன்பதின் முதன்முத னாளாம். | (15) |