79 | ஐவகைக் குறிலு மகரமுத லாக வல்லூ றாந்தை வலியான் குருகே மெல்லியன் மயிலென விளம்பின ரிவற்றின் பொருத்தமும் விருத்தமும் பகையும் பலனும் விரித்தினி தெண்ணி மேவினர் கொளலே. | (1) |
| | |
80 | எண்ணப் பட்ட அகரமுத லைந்தும் வல்லூ றாந்தை வலியான் குருகே மெல்லியன் மயிலென விளம்பிய வியற்கையிற் புள்ளென விளம்பும் புலவரு முளரே. பரணர். | (2) |
| | |
| 9.- நாள்.1 | |
81 | 2மொழிக்கு முதலா கியவெழுத் துக்கட் கோதிய நாள்வகை யியற்றுதல் கடனே. | (1) |
| | |
82 | உயிர்முத னான்குஞ் 3செயிர்தபு கார்த்திகை ஐந்து மூன்று மவற்றி னடைவே வந்தபூ ராட முத்திரா டம்மே. | (2) |
| | |
83 | ககர வருக்க வகைநாள் விரிப்பி னான்கு மிரண்டு மூன்று மூன்று மோண மாதிரை புனர்பூசம் பூசம். | (3) |
| | |
84 | சகர நான்கைந் தொருமூன் றிவற்றின் வகைநா ளிரேபதி முதன்மூன் றென்ப. | (4) |
| | |
85 | ஞகர 4வருக்கத் தொருமூன் றவிட்டம். | (5) |
| | |
| [ஞா, ஞெ, ஞொ. உ-ம்: ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.] | |
86 | தகர வருக்கத் திரண்டேழ் மூன்றற்கு வகைநாள் சோதி விசாகஞ் சதயம். | (6) |
என்று ஒரு சூத்திரம்மட்டும் தனியே எழுதப்பட்டுளது . [ச. பி.]