பக்கம் எண் :

70ஒகரக் குகர முதாசீன மாகு
மெகரம் பகை1யா மெனல்.
(17)
 

 

 
71நட்புப் பகையாம் பகையுநட் பாமவை
வைத்த முறையே 2கொளல்3
(18)
 

 

 
 

7. - கன்னல்.

 
72குணபாற் பரிதி தென்பா லியமன்
குடபால் வருணன் வடபாற் சோமன்
றிசைமுக னடுவாந் தெய்வ நிலைகளிற்
குறிலைந் தமைத்து முதன்மூன்றுங் கொள்கென
நெறியறி புலமை யறிஞர்நேர்ந் தனரே.
(1)
 

 

 
73அருக்க னியமன் வருணன் சோமன்
பிரமனுந் தெய்வ நிலையெனப் பேசுவர்.
(2)
 

 

 
744அகரமுத லாக முறையா னெய்தவத்
தெய்வந் தம்மேல் வைக்கப் படுமே.                             கபிலர்
(3)
 

 

 
75உரைத்த குறிலைந் தொரோவொன் றாக
வருக்கனொ டாகு மவ்வாறு நாழிகை.
(4)
 

 

 
76அகரந்தானே யருக்கனோ டுதிப்ப
விகர மின்புற வெய்தி யிருக்கு
முகர நடக்கு மெகர முறங்கு
மொகரந் துஞ்சுமென் றுரைத்தனர் புலவர்.
(5)
 

 

 
77அவரவர் பெயர்முத லெழுத்துவந் துதிப்ப
வவரவர்ப் பாடி னாக்கந் தருமே.                    இந்திரகாளியார்.
(6)
 

 

 
78இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க.(7)

[பி-ம்.] 1 யாகு மே. 2 கொளின். 3 இதற்குப்பின், ‘உய்த்துணர்ந்து நாடி னுயிர்மெய்ககு மிவ்வகையே, வைத்துணர்ந்து கொள்க வகுத்து’ என்று ஒரு சூத்திரம் காணப்படுகிறது. [ச.பி.] 4 அம்முத.