‘வகர வருக்கத் தொருநான்கும் ரோகணி மற்றொரு நான்கு மகசிர மாகும்.’ (100) ‘ஆரியர் சிதைவு மழிந்த வழக்குஞ் சீரிய மொழிமுதற் காமெனப் புணர்க்கும் வம்பப் புலவரு மன்னுந ராதலின் மொழிமுத லாவகை யெழுத் தெல்லாம் பன்னீ ருயிரு மன்ன வடக்கி யந்நாள் பெறுமென் றறைகுந ருளரே.’ (101) ‘இருப துடனே ழியன்ற நாளை ஒருவகை யொன்பா னாக்கி யிவ்வகை மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தேழ் அட்டம ராசி வைநா சியக்கால் விட்டனர் பின்னர் மேவினர் கொளலே.’ (102) |