99 | ஈரசை யகவன் மூவசை நான்கு நேரிறில் வெள்ளை நிரையிறில் வஞ்சி நாலசை பொதுமற் றோரசைச் சீரே. | (1) |
| | |
100 | மூவசை 1யெண்சீர் கணமென மொழிந்தனர் ஈரசை நாலசை யோரசை யொழித்தே. | (2) |
| | |
101 | கணமே மூவசைக் கூட்ட மாகும். கபிலர். | (3) |
| | |
102 | முற்பாட் டெடுப்பின் முதல¦ ரசைச்சொல் சொற்பான் மங்கலச் சொல்லொடு தோன்றி நிற்பினுங் கொள்ளார் நெறியுணர்ந் தோரே. | (4) |
| | |
103 | நன்மைசெய் கடவு ணாடி னவற்றிற்குத் தொன்னெறி மரபி 2னின்மை யானே நாலசைச் சீரு மேலோ ரொழித்தனர். இந்திரகாளியார். | (5) |
| | |
104 | நீடிய மானன் றிங்க ணிலநீர் சூரியன் வான மங்கி காற்றென வியம்பினர் தெய்வ நலம்பெறு புலவர். | (6) |
| | |
105 | 3 நேரசை மூன்றிய மான னதற்குச் சீர்புனை நாளே பரணி வாழ்நாண் மற்றது பயக்குமென் றுய்த்துரைத் தனரே. | (7) |
| | |
106 | நிரைநேர் நேர்நீண் மதிய மதற்கு வருநாண் மகசிர மலிபுக ழாகும். | (8) |
| | |
107 | நிரையசை மூன்று நிலக்கண மதற்குத் தருநாள் கேட்டை திருமிகத் தருமே. | (9) |
| | |
108 | நீர்க்கண நேர்நிரை நிரைநாள் சதயம் பார்க்கதிர்ப் பெருக்கம் பார்க்கு மென்ப. | (10) |