109 | கண்ணிய நேர்நிரை நேர்வரிற் கடுங்கதிர் நண்ணிய நோய்தரு நாள்புனர் பூசம். | (12) |
| | |
110 | நிரைநிரை நேர்தாம் வரினது வானம் பெருகிய கேடது 1தருநா ளோணம். | (13) |
| | |
111 | நெருப்பின் கணநிரை நேர்நிரை கார்த்திகை விருப்புறு நாள திடுக்கண் செய்யும். | (14) |
| | |
112 | காட்டிய நேர்நேர் நிரைவரிற் காற்றது நாட்டறை போக்குநாட் சோதி யாகும். | (15) |
| | |
113 | நிற்பன தீக்கண நான்கவை நீக்கி நற்கண நான்கவை நாட்டினர் கொளலே. | (16) |
| | |
114 | நீரே நிலனே வாே (check) நீண்மதி சீரிய மானன் செந்தீத் தெறுகதிர் காற்றெனக் கிளர்ந்த கூற்றன வென்ப. | (17) |
| | |
115 | அவைதாம், நேர்முத லாகி நிரையிணை பின்வரி னீர்க்கண மென்ப நெறியுணர்ந் தோரே. | (18) |
| | |
116 | நிரைமூன் றியைந்தது நிலனெனத் தகுமே. | (19) |
| | |
117 | முந்துநிரை யிணைந்து நேரிறு மூவசை யந்தர கணமென் 2றறிதல் வேண்டும். | (20) |
| | |
118 | முதனிரை யாகி யிணைநேர் வழிவரி னதுமதிக் கணமென் 3றறிந்தனர் கொளலே. | (21) |
| | |
119 | 4நேரசை மூன்றிய மானன் கணமே. | (22) |
| | |
120 | நேர்நடு வாகி நிரையிரு பாலுஞ் சேரு மாயிற் செந்தீக் கணமே. | (23) |
| | |
121 | நிரைநடு வாகி நேரிரு பால்வரி னலர்கதிர்க் கணமென் றறிந்தனர் கொளலே. | (24) |