பக்கம் எண் :

122ஈறுநிரை யாகி யிணைநேர் முன்வரின்
மாறி வந்த மாருத கணமே.
(25)
 

 

 
1231நிலனு மதியு நீருமிய மானனு
நலமிகு முதல்வரிற் பிறநான் கும்பகை.
(26)
 

 

 
124யாவர்செய் யுட்கு மினமொடு புணரு
மூவசைச் சீரே 2முதனிற் பனவே.
(27)
 

 

 
125அவைதாம்,
பெருக்கஞ் செய்தலின் வாழ்நாள் பயத்தலிற்
றருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்
மிகுதிரு வாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந்
தகுமெனப் பகரினுந் தகாதுமற் றச்சீர்க்
குரிய நாளொடு செய்யுட் செய்யும்
பொருபடைக் குரிசினாள் பொருந்தாக் கடையே.
(28)
 

 

 
126அவைதாம்,
தேயம் போக்குதல் செல்வத்து விளிதல்
சூனிய மாதல் சுழனோ யுறுத
லூனம் பயக்குமென் றுரைத்தன ராயினு
மாதி யமுதெழுத் தாகிய சீர்கட்
கோதிய தெய்வத் திற்குரித் தாக
வோதிய நாளொடு பாடப் படுமே.
(29)
 

 

 
127எல்லாக் கணமு நாணல மிலவெனிற்
பொல்லாங்கு தருமெனப் புகல வேண்டும்.           இந்திரகாளியார்.
 
 

 

(30)
128மங்கல மமைந்த சொல்லொடு பொருந்திய
வீரசை நான்கினு ணேரீ றொழித்து
 

1 “நேரசை மூன்றிய மான னிரைப்பின்பு நேரிரண்டு
சேர்வன திங்க ணிரையசை மூன்றுஞ் செழுநிலமா
நேரசைப் பின்னர் நிரையிரண் டாய்வரி னீர்க்கணமாந்
தேரிய லல்குற் றிருவே யிதுநல்ல சீர்க்கணமே.”

என்பது நவநீதப்பாட்டியல்

[பி-ம்.] 2 முன்னிற் பனவே.