134 | சொல்லெனப் படுமவை சொல்லுங் காலைத் திருப்பொன் பூமி புனன்மணி கடல்யா றெழுத்தமு தெழின்மழை பசுங்கதிர் செஞ்சுடர் நாள்சொன் ஞெண்டு நாட்டிய பரிமலை கருட னருந்ததி மற்றிவை யென்ப நிலைபெறு மங்கல நெறிநிற் பனவே. பொய்கையார். | (2) |
| | |
135 | செப்பிய வுடம்பொடு சேரா துயிர்முத னிற்பன மக்கட் காமென நேர்ந்திலர் மற்றவை கடவுளர் முனிவர்க் காமே. | (3) |
| | |
136 | உயிரொடு புணரா மென்மையு மிடையுஞ் செயிரிற் றீமையுஞ் செப்பத் தகுமே. | (4) |
| | |
137 | ஓதிய மெய்யொடு புணரா துயிரெழுத் தாதி நிற்பி *னானந் தம்மே. | (5) |
| | |
138 | உடம்பு பிரிவுயிர் சாத றானே. இந்திரகாளியார். | (6) |
| | |
139 | 1நரகரும் விலங்கு மமுதொடு வரினவை புகரில வென்ப புலமை யோரே. பரணர். | (7) |
| | |
140 | மூன்றைந் தேழொன் பானெழுத் தான்ற வொற்றுட னெண்ணிமுன் சொற்ற முறையிற் பல்பொருள் படவரூஉஞ் சொல்லா லகற்றி யொருபொருட் டாகி வருமொழி பற்றித் திரித லொழியத் திருந்திய சொல்லினுட் 2டெரிவோர் வகையுளி மறுத்து நட்டது மங்கலச் சொல்லென வகுத்தனர் புலவர். | (8) |
| | |
141 | முன்னிலை யெழுத்தின் †வியநிலை நலனே ‡சமநிலை யாயின் முதல்வற் கூனம். | (9) |