பக்கம் எண் :

 

3-பெயர்ப்பொருத்தம்.

 
144எண்வகைப் பெயரு நண்ணுதல் செப்பிற்
குலங்குடி கோத்திர நலம்பெறு குணமே
மனமே யாணை மன்னிய சிறப்பே
யியற்பெய ரென்றிவை தம்மு ளியன்ற
சிறப்பியற் பெயரெனு மிருதிறத் திற்கு
1மயக்கற மொழிமுத லெடுக்குஞ் சொல்லுடன்
பொருத்தங் கொள்வர் கருத்துணர்ந் தோரே.
(1)
 

 

 
145பார்ப்பா ரரசர் வணிகர்வே ளாளரெனப்
பாற்படு நாற்பெயர் குலப்பெய ராகும்.
(2)
 

 

 
146குடிப்பெய 2ராவன கூறுங் காலைச்
சேரன் சோழன் பாண்டிய னென்றிவை
போல்வன பிறவும் பொருத்தங் கொளலே.
(3)
 

 

 
147கோத்திரப் பெயரே கூறுங் காலைத்
தாதைகுடிப் பெயரைத் தக்கவற் றியற்றல்.
(4)
 

 

 
148குணப்பெய ரேனப் புலவோர் கொடுப்பத்
தணப்பில வாகித் தழுவும் பெயரே.
(5)
 

 

 
149மனப்பெய ராவன தனக்குத் தானே
யெனக்கிது வேண்டுமென் றெய்தும் பெயரே.
(6)
   
 

[இஃ திராசாக்க ணாய னடியார் தோழன்.]

 
   
150ஆணைப் பெயரே வலியோ ரஞ்சப்
பேணி யுலகம் பேசும் பெயரே.
(7)
 

 

 
151சிறப்புப் பெயரே தெரியுங் காலைச்
சிறப்புடை வேந்தன் கொடுக்கும் பெயரே.
(8)
 

 

 
152சாதியி லுள்ளோர் தமக்குத் தாமே
நீதிகொள் 3சிறப்பியற் பெயர்கொளற் குரியர்.
(9)
 

 

 
153முடியுடை வேந்தன்முற் குலத்தோர்க் கல்லது
பட்டமும் பூவும் பூணு மாழியு
நட்டமி னலமலி சிறப்புப் பெயருங்
கொடாஅ னெனமொழிப குலமொழிப் புலவர்.
(10)

[பி-ம்.] 1 மயக்கறு. 2 ராவது. 3 சிறப்பிற்.