பக்கம் எண் :

157   ஒன்றே யாகியு மொன்றுபல வாகியும்
பலவொன் றாகியும் பாற்படு மினமே.
(2)
 

 

 
158   அவற்றுள்,
ஒன்றா கியவின மெனப்பட் டனவுலா
வாற்றுப் படைவகை மடன்முத லாயின.
(3)
 

 

 
159   1ஒன்றுபல வாகிய வினமந் தாதி
கோவை காப்பிய மாதியாக் கூறுவன.
(4)
 

 

 
160   பலவொன் றாகிய வினமெனப் பட்டன
கலித்தொகை குறுந்தொகை 2நெடுந்தொகை 3முதலாயின.
(5)
   
161   பலவொன் றாகிய வினமெனப் பட்டன
கலம்பக மும்மணிக் கோவைமுத லாயின.
(6)
   
 

1.- பாப்பொருத்தம்.
(வெண்பா.)

 
162   அந்தணர் சாதி யாகிய வெள்ளைக்குச்
சந்திரன் றன்னொடு தகைமிகு வியாழன்
கடவுளர் கார்த்திகை 4முதலேழ் நாளா
மீனங் கடகந் தேளே யோரை
சந்தனம் விரைபூ வந்தண் மல்லிகை
வெண்மதி 5நிறனே வண்ண நிலனே
முல்லை யென்னச் சொல்லினர் புலவர்.
(1)
 

(ஆசிரியப்பா.)

 
163   காவலர் சாதி யாகிய வகவற்
காகிய கடவுளர் செங்கதிர் செவ்வாய்
நாளே மகமுத னாளே ழாகுஞ்
சிங்கந் தனுவே மேட மோரை
செஞ்சந் தனம்விரை கழுநீர் பூவே
செந்நிற நிறனே நன்னிலங் குறிஞ்சி.
(2)

[பி-ம்.] 1 ஒன்று பலவா கியவின மென்பவை, அந்தாதி கோவை காப்பிய மாகும். [ச. பி.]2 நெடுந்தொகை என்பது அகநானூறு.[பி-ம்.] 3 முதலியன. 4 முதனா ளேழா.5 நிறமே.