164 | நெடுநிலைக் கலியே வணிகர் சாதி கடவுளர் சனிபுதன் கருதிய நாளே யநுடமுத லாறே யோரை துலாங்குட மிதுனஞ் சந்தனம் விரைபூச் சண்பகம் பொன்னிற நிறனே நன்னில நெய்தல். | (3) |
| (வஞ்சிப்பா.) | |
165 | எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி நாளே யவிட்ட முத1லேழ் நாளா மிடபங் கன்னி மகர மோரை சார்ந்த விரையே தண்ணறுங் கலவை யேந்திய போதே யின்னறு நீல நீல 2நிறனே நெடுநில மருதம். | (4) |
| | |
166 | நால்வகைப் பாவிற்கு மேலோர் வகுத்த வினங்களும் பெறுமென நினைந்தனர் கொளலே. | (5) |
| | |
167 | நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின் பால்வகைப் படுமே 3முதலன விரண்டின் புணர்ச்சி மருட்பாப் பொருந்தா வருணம். | (6) |
| | |
168 | நாளு மோரையு நலத்தகு நிலனும் விரையுஞ் சாதியு நிறனுங் குணனு 4முரைபெறும் பாநரர்க் குடைய வென்ப. கல்லாடனார். | (7) |
| | |
169 | அந்தச் சாதிக் கந்தப் பாவே 5தந்தனர் புலவர் தவிர்ந்தன வரையார். | (8) |
| | |
170 | வெள்ளையு மகவலும் விருத்தமுங் கலியும் வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும். | (9) |
|
[பி-ம்.] 1 லே ழாகு. 2 நிறமே நிலமே மருதம். 3 முதல. 4 முரை பெறு பாநான் குடைய; முரைபெறு நான்குமுடைய. 5 யிசைந்தன புலவர் தவிர்ந்தன வரையார்.