பக்கம் எண் :

175   ஒன்றுமுத லையாண் டோதினும் வரையார்.            பொய்கையார். (4)
 

 

 
176   தோற்ற முதல்யாண் டீரெட் டளவு
மாற்றல் சான்ற வாண்பாற் குரிய.
(5)
 

 

 
177   காப்புமுத லாகிய யாப்புவகை யெல்லாம்
பூப்பு நிகழ்வளவும் பெண்பாற் குரிய.                   இந்திரகாளியார்.
(6)
 

 

 
178   தொன்1னில வேந்தர் 2சுடர்முடி சூடிய
பின்னர்ப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே,                       பரணர்.
(7)
 

 

 
179   காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன்முத
லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய 3மற்றவை 4சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.
(8)
 

 

 
180   தந்தை தாயே பாட்டன் பாட்டி
முந்துற வுரைத்தன் முறைமை யென்ப.
(9)
 

 

 
181   5திருந்திய பெண்மக வாயின் விரும்பிய
பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர்.
(10)
 

 

 
182   சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து
மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும்.
(11)
 

 

 
183   சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி யூசல்
யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு
வேண்டுத றானும் விளம்பினர் புலவர்.
(12)

[பி-ம்.] 1 னிலை. 2 பொன்முடி. 3 பத்திவை.

4 “சுற்றத் தளவுங் கவிக்கெல்லை யாய்க்கொண்டு சொல்லுவரே” என்றார் நவநீதப்பாட்டியலுடையாரும்.

[பி-ம்] 5 இச்சூத்திரத்துக்குமுன்,

‘பெண்பா லாயிற் பின்னர் மூன்று
மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்’. (14)
என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.]