188 | ஒன்பது பதினொன் றென்பது காப்பே. பரணர். | (17) |
| | |
189 | அகவல் விருத்தமுங் கட்டளை யொலியுங் கலியின் விருத்தமுங் கவின்பெறு பாவே. | (18) |
| | |
190 | பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத் தெள்ளிதிற் செப்பும் புலவரு முளரே. | (19) |
| | |
191 | முதற்க ணெடுக்கு மகவல் விருத்த மெழுத்தின் பகுதி யெண்ணினர் கொளலே. | (20) |
| | |
192 | நீணெறி யுவகை 1யாண்மக விற்கே ழைம்மூ வாண்டே 2யவர்முதற் சாற்றல். | (21) |
| | |
193 | பொங்குகதி ரிளம்பிறை புலியின் சிறுபறழ் குஞ்சரக் குழவி கோளரிக் குருளை யடலிள விடையே யாறிரண் டாண்டி னிடைநிக ழுவமை யென்மனார் புலவர். | (22) |
| | |
194 | பெண்மக விற்குப் பேசு மிடத்து மானின் கன்று மயிலின் பிள்ளை தேனி னின்பந் தெள்ளாத் தேறல் கரும்பி னிளமுளை கல்லாக் கிள்ளை யிளந்தளிர் வல்லி யென்றிவை யெல்லாம் பெய்வளை மகளிர்க் கெய்திய வுவமை. | (23) |
| | |
195 | இளங்3கதிர்த் திங்க ளெல்லார்க்கு முரித்தே. பரணர். | (24) |
| | |
196 | அவைதாம், பிள்ளையைப் பாடலிற் பிள்ளைப் பாட்டாய்ப் பிறப்பே யோகை காப்பே வளர்ச்சி யச்ச முறுத்த லுடன்செங் கீரை தால்சப் பாணி முத்தம்வா ரானை யம்புலி சிற்றில் குழமக னூச | |