| லென்றனர் பிறவுந் தொன்னெறி மரபிற் றத்தந் தொழிற்குத் தகுவன புகற லெத்திறத் தோர்க்கு முரிய வென்ப1 கொச்சகக் கலியொடு நெடுவெண் பாட்டே. | (25) | | | | 197 | நெடுவெண் பாட்டின் முந்நான் கிறவாது தொழிலொடு குறித்துத் தோன்றுஞ் செய்யு ளொன்றுமூன் றைந்தே ழொன்பான் பதினொன் றென்றிவை யிவற்றி 2னிகந்தன விழுக்கே. | (26) | | | | 198 | பிறப்பே யோகை பேணுறு வளர்ச்சி சிறைப்பட வச்ச முறுத்தலொடு நான்கு மாரா யுங்கா லைந்துமூன் றிடையா யோரே ழொருபொருட் குயர்ச்சியிழி பொன்றே. இந்திரகாளியார். | (27) | | | | | 3.-வேந்தன் குடைமங்கலம். | | | | | 199 | முன்னீ ரடியிலுங் குடைத்தொழி லியம்பியும் பின்னீ ரடியிற் றனிநிலை யிரட்டியுங் கொற்றவற் 3புகழ்ந்து குடையென முடிக்கு நற்றிற நேரிசைக் குடைவெண் பாட்டே.4 | (28) |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்க்குமாறு, ‘கொச்சகக் கலியொடு கலிவெண் பாட்டே நெடுவெண் பாட்டின்முந் நான்கிற வாது நேரடி நெடிலடி கழிநெடி லடியெனு மூவகை யடியி னீரிரண் டாகிக் கோவை யொப்பது கொச்சகக் கலியே’. (28) என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.] 2 னிழிந்தன. 3 புணர்ந்து. 4 இதற்குப்பின் சேர்க்குமாறு, ‘கொடைமங் கலப்பொருள் குறித்த நேரிசைத் தொடையமை வெள்ளை சுடர்முடி சூடிய மொய்கழன் மன்னைமுற் பாடுங் கலியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே’. (32) என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.] |