| | இனவியல் | | | 259 | வெள்ளை கலித்துறை யகவல் விருத்தங் கொள்வது நான்மணி கோத்தவந் தாதி.1 | (88) | | | 16-கலம்பகமாலை. | | | 260 | 2ஒருபோ குடனே யம்மனை நீக்கி வெள்ளை முதலா வெல்லா வுறுப்புந் தள்ளா வியலது கலம்பக மாலை.3 | (89) | | | | | | 261 | ஒருபோ கம்மனை யொழித்துவெண் பாமுதற் கருதிற் பேரது கலம்பக மாலை. | (90) | | | 17-மும்மணிக்கோவை. | | | 262 | 4வெள்ளையு மகவலு நேரிசை யாகக் கலித்துறை வரவந் தாதி யாகி முறைமையி னியல்வது மும்மணிக் கோவை. | (91) | | | | | | 263 | தோன்றிய வகவல் வெள்ளை கலித்துறை மூன்றும் வருவது மும்மணிக் கோவை.* | (92) | | | | | | 264 | மும்மூன் றொருபொருண் மிசைவரு மென்ப. | (93) |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி, ‘வெண்பா வகவல் கலியே வஞ்சியெனு நன்பா நூறவை நான்மணி மாலை’. (70) ‘அதுவே யந்தாதி யாக வருமே’. (71) என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச-பி.] 2 ஒருபோ குடனம் மனைநனி நீக்கி. [ச-பி.] 3 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி, ‘அந்த மாதி யாகியுங் கலம்பகம் வந்த செய்யுளள வாகினும் வருமே’. (73) என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] 4 ‘அகவலும் வெள்ளையு நேரிசை யாகக் கலித்துறை வரவந்த மாதி முறைமையி னியல்வது மும்மணிக் கோவை யாகும்’. [ச-பி.] * இதற்கும் அளவு முப்பது. இஃது ஆசிரியம் வெண்பாக் கலித் துறையாக வருமெனவும், மும்மணிமாலை வெண்பாக் கலித்துறை ஆசிரிய விருத்தமாக வருமெனவும் கொள்க. |