| | இனவியல் | |
| மிருவகை நடையு மைவகை யுணர்வு முடையோர்ப் பேணலு முளப்படப் பிறவு நண்ணிய வேளாண் பாவி னலம்பெற வெண்ணி யுரைப்ப தியானைத் தொழிலே. | (99) |
| | | |
| 271 | 1கிரிசரம் வனசர நதிசர மென்றிவை நிலைபெறு நிலனென நிறுத்திசி னோரே. | (100) |
| | | |
| 272 | உயரமு நீளமுஞ் சுற்று மளவினிற் குறையா தியல்வது நிறைவெனப் படுமே. | (101) |
| | | |
| 273 | பல்வகைத் தேயங் கொல்களிறு பிறக்கும் பல்வகைத் தேயமு மென்மனார் புலவர். | (102) |
| | | |
| 274 | பாத நாலுங் கையும்வா லதியுங் கோசமு நிலனுறத் தீண்டுதல் குறியே. | (103) |
| | | |
| 275 | குலமெனப் படுவது பலவகை வருணமு நலனுற வுரைக்கு நலத்த தென்ப. | (104) |
| | | |
| 276 | நலமிகு வாழ்நாள் பொலிவுற வியம்புதல் யாண்டென மொழிப வியனெறிப் புலவர்.2 | (105) |
| | | |
| 277 | கையுமுற் கூறுங் கடியபிற் கூறுங் கூர்ங்கோ டிரண்டுங் கொலைத்தொகை வகையே. | (106) |
| | | |
| 278 | முன்ன ரூன்றிய காற்குறி தன்னிற் பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப. | (107) |
| | | |
| 279 | பிறழ விடுவது வக்கிர மதுவே சாரிகை விகற்பமு மாகு மென்ப. | (108) |
| | | |
| 280 | நன்மை யியற்றலுந் தீமை யியற்றலும் பற்றிய நன்மை தீமை நினைத்தலுங் கயக்கறு கால நினைத்தலும் புலனே. | (109) |
என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.]