பக்கம் எண் :

 

இனவியல்

 
289எண்ணிய வகையா னின்னிசை வெண்பாத்
தொண்ணூ றெழுபது தொடுப்பதத் தொகையே.        கோவூர்கிழார்.
(118)
 

 

 
 

24-விருத்தவகை.*

 
290பரிசிலை யானை 1வாள்குடை வேல்செங்
கோலொடு நாடூ 2ருரைப்பி னகவல்
விருத்தம் பத்தென 3வேண்டினர் புலவர்.
(119)
 

 

 
 

25.-ஐம்படைவிருத்தம்.

 
291சக்கரந் தனுவாள் சங்கொடு தண்டிவை
யைம்படை யகவல் விருத்த மாகும்.
(120)
 

 

 
 

26-நாழிகைக்கவி.

 
292ஈரிரண் டியாமத் தியன்ற நாழிகைச்
சீர்திகழ் வெண்பாப் பாடுநர் யாவரு
மிருநான் கேழே ழிருநான் காமெனக்
கன்னன் முப்பது மெண்ணின ரினிதே.
(121)
 

 

 
293மன்னர் கடவுளர் முன்னிலை யாக
வன்ன கடிகை யென்னு மியல்பிற்
றொகுநெறி யன்னவை நேரிசை வெண்பா.
(122)

[முதல் யாமம் ஏழளவும் பாடி எட்டாவதில் யாமம் ஒன்றென்றும், இரண்டாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் இரண்டென்றும், மூன்றாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் மூன்றென்றும், நான்காம் யாமம் ஏழளவும் பாடி எட்டில் யாமம் நான்கென்றும் பாடின் முப்பதுவெண்பாவாம்]


* பரி முதலியவற்றைப் பத்துப்பத்தாகக் கூறும் ஒன்பதுவகை விருத்தமும் அவ்வப்பெயரான் விளங்குமென்றுணர்க.

[பி-ம்.] 1 வாளொடு வேறேர். 2 ருறுப்பி. 3 விளம்பினர்.

4 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி,

‘வரிசிலை யானை வாளொடு வேலே
தேர்பரி நாடூ ருரைப்பி னகவல்
விருத்தம் பத்தென விளம்பினர் புலவர்’.

(98)

என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]