| | பன்னிருபாட்டியல் | |
| 294 | பாவே யினமே யென்றிவை யிரண்டு மேவிய வகையது நவமணி மாலை. | (123) |
| | | |
| | 28-கைக்கிளை மாலை. | |
| 295 | 1இரங்க வருவது மயங்கிய வொருதலை யியைந்த நெறியது கைக்கிளை மாலை.2 | (124) |
| | | |
| 296 | தாயர் சேரிய ராயர் தீங்குழ றென்றல் சேமணி யன்றி றிங்கள் வேலை வீணை மாலை கங்குல் காம னைங்கணை கண்வளர் கனவென வெஞ்சிய நன்னிற வேனில் குயிலே கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேக்கை பயிறரு3 நன்னலம் பாங்கர் பாங்கிய ரியன்ற பருவர லென்மனார் புலவர். | (125) |
| | | |
| 297 | முல்லை யசோகு மாந்தளிர் தாமரை யல்லி நீல மைங்கணை யாகும். | (126) |
[மயங்கிய என்றதனால் ஓரினப்படுத்திப்பாடுவாருமுளர். பாடும்பொழுது மருட்பாவாற் 4பாடப்படும்: அல்லாதவழி ஆசிரியமும் வஞ்சியும் ஒழிய அல்லாத பாவானும் இனத்தானும் 4பாடப்படும். சிறுபான்மை ஆசிரியப்பாவானு மினத்தானும் 4பாடப்படும் (எனக் கொள்க.)] |
| | 29-அரிபிறப்பு. | |
| 298 | சேலே யாமை யேனஞ் சிங்கங் கோல வாமனன் மூவகை யிராமர் கரியவன் கற்கி யெனவரு கடவுளர் புரிதரு தோற்றந் தெரிதரப் பராஅய்ப் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டி | |