| | பன்னிருபாட்டியல். | |
| | 34-செந்தமிழ்மாலை. | |
| 306 | எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை செப்பிய 1நெறியது செந்தமிழ் மாலை. | (135) |
| | | |
[பாவானும் இனத்தானும் 2பாடுவாரு முளர். நான்கு முதற்பாவானாதல் ஒருபாவி னினத்தானாதல் 3பாடுக என்பாருமுளர்.] |
| | 35-தாண்டகம். | |
| 307 | மூவிரண் டேனு மிருநான் கேனுஞ் சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று ளறுசீர் குறியது நெடியதெண் சீராம். | (136) |
| | | |
| 308 | அறுசீ ரெண்சீ ரடிநான் கொத்தங் கிறுவது தாண்டக மிருமுச் சீரடி குறியது நெடிய திருநாற் சீரே. பல்காயனார். | (137) |
| | | |
| 309 | மங்கல மரபின் மானிடர் கடவுளர் தம்புக ழுரைப்பது தாண்டக வகையே. | (138) |
| | | |
| 310 | தாண்டக மானிடர் கடவுளர்க் குரித்தே. மாபூதனார். | (139) |
| | | |
| 311 | அடிவரை நான்கும் வருமெழுத் தெண்ணி நேரடி வருவது தாண்டக 4மாகும். சீத்தலையார். | (140) |
| | | |
| | 36-பதிகம். | |
| 312 | ஆசிரி யத்துறை யதனது விருத்தங் கலியின் விருத்த மவற்றி னான்கடி யெட்டின் காறு முயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிக மாகும். | (141) |
| | | |
| | 37-சீர்மெய்க்கீர்த்தி. | |
| 313 | சீர்நான் காதி யிரண்டடித் தொடையாய் வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியு மந்தத் தவன்வர லாறு சொல்லியு | |