பக்கம் எண் :

 

இனவியல்

 
மவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவ
னியற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்
திறம்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி.1
(142)
 

 

 
3142நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியி னந்த
முரையாய் முடியு மெனவுரைத் தனரே.                கோவூர்கிழார்.
(143)
 

 

 
 

38-செருக்களவழி.

 
315செய்த நிலைபெறு புகழ்புனை
நேரிசை வெண்பா வின்னிசை வெண்பாப்
பஃறொடை வெண்பா மறக்கள வழியே.
(144)
 

 

 
316நேரிசை யின்னிசை பஃறொடை வெண்பா
போரின் களவழி புகலப் படுமே.
(145)
 

 

 
 

39-மறக்களவஞ்சி.

 
317குறள்சிந் தளவடி யகவ லடிவிராஅய்
வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்கள
மெஞ்சா துரைப்பது மறக்கள வஞ்சி.
(146)
 

 

 
318இயங்குபடை மன்ன ரிகற்களம் புகழ்ந்த
மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி.
(147)
 

 

 
 

40-செருக்களவஞ்சி.

 
319விருத்தவகை பத்தான் விளம்பு மதனைச்
செருக்கள மெனவே செப்பினர் புலவர்.
(148)
 

 

 
 

41-ஆற்றுப்படை.

 
320புரவலன் 3பரிசில் கொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு மிருங்கா னத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
புரவல னாடூர் பெயர்கொடை பராஅ
யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை.
(149)

[பி-ம்.]

1 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி,
‘மதிபுரை வெண்குடைக் கீழரி யணைமிசை
விதியினி திருந்தென மெய்பெற நாட்டே’.

(122)

என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது.

2 நிரைபெறு. 3 பரிசு. [ச-பி.]