| | பன்னிருபாட்டியல். | | | 321 | ஓங்கிய வதுதா னகவலின் வருமே. | (150) | | | | | | 322 | புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே. | (151) | | | | | | | 42-கண்படைநிலை. | | | 323 | காலைபகன் மாலை யாழ்முறை யறத்திய லமைச்சிய லரசிய லேனை யியலிசை 1நாட கத்திய லோடு நான்மறை முறையே யெய்தினை யூழி வாழி யினிய மகளிரோ டின்பத்துயில் கொள்கென் றிங்ஙன முரைப்பது கண்படை யாகும். | (152) | | | | | | | 43-துயிலெடைநிலை. | | | 324 | கண்படை மன்னவர் முன்னர்த் தண்பதம் விடிய லெல்லை யியல்புறச் சொல்லித் தந்த திறையருந் தாராத் திறையரு 2மேத்தி நின்மொழி கேட்டினி தியங்க வேண்டின ரித்துயி லெழுகென விளம்பி னதுவே மன்னவர் துயிலெடை நிலையே. | (153) | | | | | | | 44-விளக்குநிலை. | | | 325 | துளக்கமின் மன்னர்க் காம்விளக் குரைப்பது விளக்கு நிலையென வேண்டினர் புலவர். | (154) | | | | | | | 45-கடாநிலை. | | | 326 | கொற்றவை தனக்குக் கொற்றவ ரெறியுங் கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும். | (155) | | | | | | 327 | வடாஅதுறை கன்னிக்கு மன்னவ ரெறிந்த கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும். பெருங்குன்றூர்கிழார். | (156) |
[பி-ம்.] 1 நாடகத் தியலொடு நான்கு முறைமுறை, யெய்தினை யூழிவாழி யினிய, மகளிரொ டின்பத் துயில்கொள்கென் றின்ன, உரைப்பது கண்படை யாகுமென்ப. 2 மேற்ற; மேத்திநின் மொழிகேட் டினிதியங்க வேண்டின, ரித்துயி லெழுகென வியம்பி னதுவே, மன்னவ ரின்பத் துயிலெடை நிலையே. [ச-பி.] |