பக்கம் எண் :

 

பன்னிருபாட்டியல்.

 
 

51-பயோதரப்பத்து, நயனப்பத்து.

 
333பணைமுலை நயனம் பாங்கா மகவல்
விருத்தம் பத்தென விளம்பினர் புலவர்.
(162)
 

 

 
334ஆகிய கண்முலை யகவல் விருத்தம்.           பெருங்குன்றூர்கிழார். (163)
 

 

 
 

52-உழத்திப்பாட்டு.

 
335புரவலற் கூறி யவன்வா ழியவென்
றகல்வயற் றொழிலை யொருமை யுணர்ந்தன
ளெனவரு மீரைந் 1துழத்திப் பாட்டே.
(164)
 

 

 
 

53-குறத்திப்பாட்டு.

 
336இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமுந்
திறப்பட வுரைப்பது 2குறத்திப் பாட்டே.
(165)
 

 

 
337குறத்திப் பாட்டு மதனோ ரற்றே. (166)
 

 

 
 

54-ஒருபாவொருபது.

 
338வெள்ளை யாத லகவ லாத
றள்ளா வொருப தொருபா 3வொருபது.
(167)
 

 

 
 

55-இருபாவிருபது.

 
339வெள்ளை யகவல் பின்னர் முறைவைத்
தெள்ளா 4தியல்வ திருபா விருபஃது.
(168)
 

 

 
340ஒருபா 5வொருபது மிருபா 6விருபதுங்
கருதிய வெள்ளையு மகவலுங் காட்டினர்.
(169)
 

 

 
 

56-கோவை.

 
341கோவை யென்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனுங் கிளவி
யைந்திணை திரியா வகப்பொரு டழீஇ
முந்திய கலித்துறை நானூ றென்ப.
(170)

[பி-ம்.] 1 துழத்தியர் பாட்டே. 2 குறத்தியர் பாட்டே. 3 வொருபஃது. 4 வியல திருபா விருபது. 5 வொருபஃது. 6 விருபஃதுங்.