| 5.-பால். | |
45 | ஆண்பால் பெண்பா லலியென நின்ற மூன்றே பாலென மொழிந்தனர் புலவர். | (1) |
| | |
46 | இருவகை யைங்குறி லாண்பா லென்ப. | (2) |
| | |
47 | அகரமோ டைங்குறி லென்றா ராண்பால்.1 | (3) |
| | |
48 | நெடிலே ழிருவகை பெண்பா லென்ப. | (4) |
| | |
49 | ஒற்று மாய்தமு மலியெனப் படுமே. | (5) |
| | |
50 | ஒற்றின் வருக்க மொன்பதிற் றிரட்டியும் பெற்ற வாய்தமும் பேடெனப் படுமே. | (6) |
| | |
51 | அவ்வவ் வெழுத்தே யப்பாற் குரிய விரவினும் வரையா ரலியெழுத் தொழித்தே. | (7) |
| | |
52 | 2அவ்விரு பாற்கு மலியெழுத் தாகா தம்முண் மயங்கினுந் 3தாவின் றென்ப. | (8) |
| | |
53 | உயிரீ ராறு மாணென மொழிப வுயிர்மெய் யெல்லாம் பெண்ணென மொழிப வுடம்பெழுத் தெல்லா நபுஞ்சக மாகும். பொய்கையார். | (9) |
| | |
| 6.-தானம். | |
54 | குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற ஐ ஔ விரண்டும் இ உ வடக்கிப் பால குமார வரசு மூப்பு மரணமென் றைவகைத் தானம் வகுத்தனர். | (1) |
| | |
55 | முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப் பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொளலே. | (2) |
| | |
| அகத்தியர் பாட்டியல். | |