பக்கம் எண் :

திரு அவதாரம்269

 

138.(1) இராயனுக்கு வரிசெலுத்தலாமா?
மத். 22 : 15 - 22; மாற். 12 : 15 - 17; லூக். 20 : 20 - 26.

115.       பரிசயரின் சீடருமே ரோதியரும் தற்பரனா மன்புநிறை புண்யரிடம்
              பரிவுளோற்போர் காட்டியேபா சாங்கொடுப்பா ராட்டுமிகு வார்த்தைகளா லேபசப்பி
             கரிசனையாய் வாய்ச்சொலிலே குற்றமெதுங் கண்டுபிடித் தேயதிபன் முன்னிறுத்த
             விரிவுளதாங் கண்யமுறும் வார்த்தைகளால் வீண்முகமன் பாடியேவி னாவினாரே.

116.       சத்தியமே யுள்ளவர்நீர் இன்னுமுகத் தாட்சணிய மற்றவரே யாரெனினும்
              சத்தியமு மக்கெவர்க்கு மில்லைகவை சத்தியமாந் தெய்வமுட மார்க்கத்தை
              சத்தியமாய்ப் போதனையே செய்கிறீரே கித்திவரி தாரணிபர்க் கேசெலுத்தல்
             நித்தியரின் மக்களுக்கே நியாயமாமோ செய்வோமோ நிறுத்துவோமோ சாற்றுவீரே.

117.       அவருடைய வஞ்சமறிந் தண்ணலாரோ மாயரேயேன் சோதனையே செய்கின்றீர்
              இவண்கொணர்வீர் ஓர்காசே என்னிடமே காட்டுவீரே னக்காசை யென்றனரே
              இவரிடமே கொண்டுவந்தார் காசொன்றை யச்சுருபம் மேலெழுத்தும் யாரதென்றார்
              அவர்சொலவே ராயனதே அவர்க்கதையே சேர்த்துவிடு மம்பரனுக் கவரதையே.

118.       ஒருபிடியாய் யூதரின்பிர மாணத்தை யுறுதியாயெ ழுத்தெழுத்தாய்க் கொண்டவரும்
              இருமனதாய் யூதமுறை யஞ்ஞானம் இருமுறையுஞ் சேர்த்தனுச ரித்தவரும்
              திருத்தமொடு யேசுரைத்த வாக்கறிந்தே சுவரிலெறி பந்தேபோற் பின்திரும்ப
              விருத்தமொடு வந்தனர்சோ திக்கவுமே விசுவசமே மற்றவராஞ் சாதுசேயர்