138. பார்ப்பவர்பு கழ்வதற்கே நீண்டசெபம் பகல்முழுது மேசெபிப்பார் வீதிகளில் பார்ப்பவர்ப ழிக்கவுமே மாதுணிவாய்ப் பட்சிப்பார் விதவைகளின் வீடுகளை ஏற்பரேதாம் இந்தமாயக் காரருமே மறுமையினி லிணையிலாத வாக்கினையே பார்த்துமேயின் னோருடைய மாயத்தைப் பயந்தேநீர் விலகுவீரிம் மாயரையே. 139. அழைக்கவேவேண் டாமுமைர பீகளென அண்ணலார்கி றித்துவேயும் போதகரே அழைப்பீரே சோதரரென் றேனையரை யாவரும்நீர் மக்களாவீ ரோர்தாய்க்கே அழையாதீர் தந்தையென யாரையுமே அன்புளபி தாஒருவ ரேபரத்தில் அழைக்கவேவேண் டாமுமைக்கு ருக்களென அண்ணலார்கி றித்தொருவ ருங்குருவே. 140. எவனொருவ னுங்களுக்குள் ளேபெரியோன் எல்லவர்க்கு மூழியனே யாகஅவன் எவனொருவன் தன்னையேயு யர்த்தினாலோ ஏனையருள் ளேகடையாய்த் தாழ்வடைவான் எவனொருவன் தன்னையேதான் தாழ்த்துவானோ ஏனையருள் மேன்மையுள னாயுயர்வான் எவனுமேயு ணர்ந்திதனை யிவ்வுலகில் இசைந்தொழுக என்றுபோதித் தார்பரனே. 141. ஐயோவு மக்குவேத பாரகரே ஐயோபர் சேயரேயு மக்குமையோ ஐயோநீர் வானராச்சி யத்தையேய டைக்கிறீரே யாருமுட்செல் லாதபடி ஐயோநீ ரேயதனுட் செல்வதுண்டோ அப்படியே செய்வதில்லை திண்ணமேதான் ஐயோநீ ருட்செலவி ரும்புவோரைத் தடுக்கிறீரே யுள்ளேசெல் லாதபடி 142. உங்களுக்கே ஐயையோ மாகொடிய மாயமுற்ற பாரகரே பரிசயரே உங்களது மார்க்கமாக்க ஓர்வனையே பூமியுஞ்ச முத்திரமுஞ் சுற்றுகின்றீர் உங்களது மார்க்கமவன் சேர்ந்ததன்வின் உங்களது சாதனையின் காரணமாய் உங்களிலும் ரண்டுபங்கா யேநரகின் ஓர்மகனா யாக்குகின்றீ ரேயவனை. |