பக்கம் எண் :

புறன

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

125

நண்ணி வியாக்கிரபாதரைக் கண்டு அளவளாவி அவரோடு சிவபெருமான் குறித்த இடத்தை நண்ணிக் குறித்த காலத்தை எதிர்பார்த்திருந்தனர். நெடுங்காலம் இங்ஙனம் செல்லக் குறித்தநாள் வந்துற்றது.  அன்று, இவ்விருவரும், முனிவரர் மூவாயிரரும், அரியயன் முதலிய தேவருங் காணச் சிவபெருமான் தில்லைப்பொதுவில் திருநடனஞ் செய்தருளினர்.

    செய்யுள்-13. ‘ ஒப்பனை மைப்பரந் தெறிக்கும் விழியினால் உருகி ஒருபுற மளித்த விமலனே ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு :  சிவபக்தரான பிருங்கி முனிவர் நாடோறும் சிவபெருமானை வலம்வந்து வழிபட்டு வணங்கும் நெறியுடையவர்.  அவர் உமாதேவியை நீக்கிச் சிவபெருமானைமட்டும் வலம் வருதலைக் கண்ட தேவியார் இறைவனை நோக்கி முனிவர் தம்மை வலம் வராமைக்குக் காரணம் யாதென வினாவினார்.  அதற்குச் சிவபெருமான் ‘ இஷ்ட சித்தி பெற விரும்புவோர் உன்னையும் முத்திபெற விரும்புவோர் என்னையும் வலம் வருவர்’ என்றார்.  அது கேட்ட உமாதேவியார் சிவபெருமானைப் பிரியாதிருக்கத் தவஞ்செய்தனர்.  சிவபெருமான் தேவியார் தவத்துக்கிரங்கித் தமது இடப்பாகத்தை அளித்தனர்.

    செய்யுள்-17. ‘ நாரண னறியாத் திருவுரு ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு :  ஒரு காலத்தில் அயனும் மாலும் தாந்தாமே தலைவர் என்று தருக்கி வாதிட்டனர்.  அப்போது, அவர்கள் தருக்கடக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான் இருவருக்கும் இடையே தோன்றி ‘ எமது அடியையேனும் முடியையேனும் எவர் காண வல்லீரோ, அவரே தலைவர் ’ என்றருளினர்.  அது கேட்டு அயன் ‘ யான் முடி காண்பேன் ’ என்று அன்னவுருக்கொண்டு எழுந்து விண்சென்றும், திருமால் ‘ யான் அடி காண்பேன் ’ என்று வராக உருக்கெண்டு நிலங்கீண்டு சென்றும் அடி முடி தேடினர்.  நெடுங்காலந் தேடியும் இருவரில் எவரும் சிவபெருமான் அடியையேனும் முடியையேனும் காணமாட்டாமல் எய்த்து ஓய்ந்து தம் தருக்கொழிந்தனர்.

    செய்யுள்-19. ‘ குறுமுனிபரவ ’ என்றதாற் பெறக்கிடக்கும்