பக்கம் எண் :

 கருத்துச் செரிவுகள்:

(1) 'கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக் கிடக்கும்
    இரு கொங்கையாள்' (18)
(2) 'சங்கவீதியில் சங்கம் தோற்றாள்'ஹ  
(3) 'சடைகொண்டாள் உடைதான்கொண்டு  
      தன்னுடைய கொடுத்தான் ஐயன  
   உடைகொண்ட வழக்குத்தானோ ஊர்கின்ற  
      தோர்கொண் டாளே' (27)
(4) 'கூனை கொண் டமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால்
      வெதுப்பு வாரே' (26)
(5) 'மன்றல் கமழ்சிறு தென்றல்வரும்வழி  
      நின்றுதரளம் இலங்கவே.' (51)
(6) 'அந்நலார் மொழி தன்னைப் பழித்ததென  
      றாடவர் மண்ணில் மூடும் கரும்பு  
   துன்னி மீள வளர்ந்து மடந்தையர  
      தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று  
   பின்னும் ஆங்கவர் மூரலை வென்று  
      பிரியுங்காலத்தில் பெண்மையை வெல்லக்  
   கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்கும்.' (56)
(7) 'தாழை சோறிட வாழை குருத்திடும்' (56)
(8) 'கல்விமான் சிவப்பின் மிக்கான்; கழுத்தின்மேற  
      கறுப்பும் உள்ளான்.' (65)
(9) 'பெண்ணரசே பெண்ணென்றால் திரியு மொக்கும்;  
      ஒரு பெண்ணுடனேசேர வென்றால்கூடவுமொக்கும்  
   திண்ணமாக வல்லவனும் நாதனுமொக்கும்;  
      திரிகூடநாதன் என்று செப்பலாமம்மே' (78)

என்பன போன்றவை நுண்ணிய கருத்தமைதி கொண்டவை. அவற்றை ஆய்ந்து பொருள்காண்பார்க்கு அவை இறும்பூது தருவனவாகும்.

ஆ.உவமை நயங்கள்:

(1) 'மடவார் கண்போல் ஈட்டிக்கொண்டு' (83)
(2) ஞாளிபோல் சுவடெடுத்து;  
       பூனைபோல் ஒளிபோட்டு, நரிபோல் பம்மி,  
  கூளிபோல் தொடர்ந்தடிக்கும்.' (84)
(3) 'ஆலாவும் கொக்கும் அருகே வருகுது  
      ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது  
  வேலான கண்ணியர் ஆசையி னாற்கீழும்  
      மேலும் திரிந்திடும் வேடிக்கைக் காரர்போல். (99)
(4) 'மேடையில் நின்றொரு பஞ்சவர் ணக்கிளி  
      மின்னார்கை தப்பியென் முன்னாக வந்தது  
  பேடையென் றேயதைச் சேவல் தொடர்ந்தது  
      பின்னொரு சேவலும் கூடத் தொடர்ந்தது  
  கூடியஇன்பம் இரண்டுக்கும் எட்டாமல்  
      சுந்தோப சுந்தர்போல்' (105)
(5) 'சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்கரம்  
      செபித்த மன்னவன் பாவம்போ னாற்போல.' (105)
(6) 'தம்பமென் றேநம்பி னோரைச் சதிபண்ணித்  
            தாம்வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்  
  பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர்  
      பாவம் கழிநீராய்ப் போவது போலவும்  
  கும்ப முனிக்குச் சிவமான காலம்  
      குதித்தோடிப் போன வயிணவர் போலவும்  
  அம்பிகை பாகர் திரிகூட நாதர்  
     அடியவர் மேல்வந்த துன்பங்கள் போலவும்' (105)

எனவும் பிறவாறும் வருவன, உவமை நயங்களுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இ.அருஞ் சொற்றொடர்கள்

(1) மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்  
      நன்னகரம்.' (12)
(2) 'நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையும்  
     தோற்ற, கன்னியர்' (16)
(3) 'மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும்' (24)
(4) 'கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவார்.' (31)
(5) கொடியே மதுரம் பழுத்தொழுகும் கொம்பே.' (35)
(6) 'கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தை.' (36)
(7) 'அஞ்சு தலைக்குள் ஆறு தலைவைத்தார்.' (41)
(8) 'கோட்டுவளம் முலைகாட்டும் கொடியின்வளம  
      இடைகாட்டும்.' (55)
(9) 'நீர்வளர் பவளமேனி நிமலர்குற் றாலநாதர்.' (61)
(10) 'பாமாலைத் திரிகூடப் பரமரருள் பெறுவசந்தப் பாவை' (80)
(11) 'புலியொடு புலியைத் தாக்கிப் போர்மதயானை  
     சாய்க்கும், வலியவர்.' (86)

எனவரும் இன்னன போன்ற பல சொற்றொடர்கள், அரியன வாய்ப் பேரின்பத்தைப் பெருக்குவித்து ஒளிர்விக்கும் பகுதிகளாம்.

(ஈ) ஓசை நயங்கள்:

(1) 'இருண்ட மேகஞ் சுற்றிச் சுருண்ட சுழியெறியும்  
      கொண்டையாள் - குழை  
  ஏறி ஆடிநெஞ்சைக் சூறையாடும் விழிக்  
      கெண்டையாள்.' (18)
(2) 'இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ  
      ரம்பையோ மோகினியோ-மனம்  
  முந்திய தோவிழி முந்திய தோகரம்  
      முந்திய தோவெனவே-உயர்  
  சந்திரசூடர் குறும்பல வீசர்  
      சங்கணி வீதியிலே-மணிப்  
  பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்  
      பந்துகொண் டாடினளே' (20)
(3) 'மந்தர முலைகள் ஏசலாட மகரக்குழைகள் ஊசலாடச்  
  சுந்தர விழிகள் பூசலாடத்
  தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மென.' (22)

எனவும் பிறவாறும் வருவன ஓசைகளின் நயங்கட்கு எடுத்துக் காட்டுக்களாம்.