பக்கம் எண் :

உ.சேரிமொழிச் சிறப்புக்கள்

(1) 'கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே' (79)
(2) 'கண்ணி கொண்டுவாடா-குளுவா கண்ணி கொண்டு வாடா,' (95)
(3) 'பறவைகள் எல்லாம் பரந்தேறி மேயுது' (95)
(4) 'தரிகொண்டு தில்லை நரிகொண்டு போச்சு.' (95)
(5) 'பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே' (95)
(6) 'கறந்த கண்ணியை நெருக்கிக் குத்தினால்  
      காக்கையும்படுமே-குளுவா, காக்கையும்படுமே.' (67)
(7) 'கெம்பா றடையே-பொறுபொறு, கெம்பாறடையே.' (99)
(8) 'ஏறாத மீன்களும் ஏறி வருகுது.' (99)
(9) 'எத்திசைப்பட்ட குருகும் வருகுது.' (99)
(10) 'தேசத்துக் கொக்கெல்லாம் கண்ணிக்குள் ளேவந்து  
      சிக்குது பார்கறி தக்குது பார்.' (99)
(11) 'ஆயிரங் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்  
      அப்பாலே போயொரு மிப்பா யிருக்ககையில்.' (105-4)
(12) 'காகங்கள் ஆயிரம்பட்டு மறைத்து  
      விறைத்துக் கிடப்பது போலவே' (105-4)
(13) 'அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்.' (114)
(14) 'காலுக்கு மேலே பெரிய விரியன்  
      கடித்துக் கிடப்பானேன் சிங்கி.' (125)
(15) 'சேலத்து நாட்டில் குறிசொல்லிப் பெற்ற  
      சிலம்பு கிடக்குதடா சிங்கா' (125)

என்பன போன்றன, சேரிமொழிகளாற் செவ்விதிற் கூறும் தொடர்களாம். இவை வழூச்சொற்களாகக்கல்வியறிவுபெறாத காட்டில் வாழும் குறவர்கள் பேசும் பேச்சுக்கள் போல்எளிமையாகவும் கேட்க இன்பமாகவும் இருக்கின்றன வல்லவா?

(ஊ) இறைவனைப் பற்றிய கருத்துரைகள்:

(1) 'குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்து' (3)
(2) 'நித்தர்திரி கூட லிங்கர்'  
(3) 'சீரிய தமிழ்மாலைக்குட் செல்வர்; குற்றாலத்தீசர்.' (6)
(4) 'குறுமுனிக்கா மறியெழுந்த கரங்காட்டும் வள்ளலார்.' (12)
(5) 'மவுன நாயகர், எவன நாயகர், சிவனுமாய்  
     அரி அயனும் ஆனவர்.' (13)
(6) பாலேறும் விடையில்வரும் திரிகூடப் பெருமானார். (14)
(7) 'நன்னகர்ப் பெருமான்.' (15)
(8) 'ஒருபெண் முடியில் வைத்தார். (24)
(9) 'முனிபரவும் இனியாள்; வேத முழுப்பலவின் கனி;  
     கனியில் வைத்த செந்தேன்.' (26)
(10) 'வானவர் திருக்குற்றாலர்' (26)
(11) 'அண்ணலார் திரிகூடநாதர்.' (33)
(12) 'படியே ழுடையர் (35)
(13) 'மெய்யர்க்கு மெய்யர் திரிகூடநாயகர்' (36)
(14) 'கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்து.' (36)
(15) 'நரைத்தமா டேறுவார்.' (37)
(16) 'மன்னவர் குற்றாலர்; நன்னகரில் ஈசர்.' (38)
(17) 'குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமல மூர்த்தி' (39)
(18) 'தெய்வ முத்தலைசேர் திரிகூடமலையன்; சித்திரா நதியான்!  
  தென்னாரிய நாட்டான்; நன்னகர்ப் பதியான்; ஓராயிரமறை ஓங்கிய  
  பரியான்; ஈராயிர மருப்பு ஏந்திய யானையான்; ஆணையால்  
  அடக்கி .... கொற்ற வெண்குடையான்  
  (இவை பத்துறுப் புக்கள்) (49)
(19) 'முன்னங்கிரி வளைத்த முக்கணர்.' (51)
(20) 'தோட்டுவளம் புரிகாதர். (55)
(21) 'திருக்குற்றால மூர்த்தி. (59)
(22) 'கல்வித் தமிழ்க்குரியர்; திரிகூடக்கர்த்தர். (101)
(23) 'சாட்டி நிற்கும் அண்டமெல்லாம் சாட்டையில்லாப்  
      பம்பரம்போல், ஆட்டுவிக்கும் அண்ணலார். (117)

  இன்னன போன்றன இறைவனைக் குறித்துச் சிறப்பாகக் கூறும் திருப்பெயர்கள்.

    இந் நூலின் இறுதிப்பகுதி இந் நூலைக் கற்றார்க்கு எய்தும் பயனைக் கூறி முடிவுறுகின்றது. பின்னர் அன்பினால் வாழ்த்தி நூலை மங்கலமாக முற்றுவிக்கின்றார்.

'ஆதிமறை சொன்னவனை அனைத்துயிர்க்கும் முன்னவனை
மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன்

என்பது இறுதியில் கூறி நூலை முடிக்கும் இன்பக் காட்சித் தொடர். அதையே கொண்டு நாமும் வாழ்த்தித் திருக்குற்றால நாதப்பெருமான் திருவடிகளை முன்னி இன்பம் பெருக. இம்முன்னுரையை முன்னுரைத்து முற்றுவிக்கின்றோம்.