| |
பல்லவி
|
| (1) |
பவனி
வந்தனரே-மழவிடைப், பவனி வந்தனரே |
| |
அனுபல்லவி
|
| (2) |
அவனி
போற்றிய குறும்ப லாவுறை |
| |
மவுன
நாயகர் எவன நாயகர் |
| |
சிவனு
மாய்அரி அயனு மானவர் |
| |
கவன
மால்விடை அதனி லேறியே. (பவனி) |
| |
சரணங்கள்
|
| (3) |
அண்டர்
கூட்டமும் முனிவர் கூட்டமும் |
| |
அசுரர்
கூட்டமும் மனிதராகிய |
| |
தொண்டர்
கூட்டமும் இமைப்பி லாரெனச் |
| |
சூழ்ந்து
தனித்தனி மயங்கவே |
| |
பண்டை
நரரிவர் தேவர் இவரெனப் |
| |
பகுத்து
நிறுவிய வேளை தொறுந்தொறும் |
| |
மண்ட
லீகரை நந்தி பிரம்படி |
| |
மகுட
கோடியிற் புடைக்கவே (பவனி) |
(4) |
தடுப்ப தொருகரம்
கொடுப்ப தொருகரம் |
| |
தரித்த
சுடர்மழு விரித்த-தொருகரம் |
| |
எடுத்த
சிறுமறி பிடித்த தொருகரம் |
| |
இலங்கப்
பணியணி துலங்கவே |
| |
அடுத்த
ஒருபுலி கொடுத்த சோமனும் |
| |
ஆனை
கொடுத்தவி தானச் சேலையும் |
| |
உடுத்த
திருமருங் கசைய-மலரயன் |
| |
கொடுத்த
பரிகலம் இசையவே. (பவனி) |
(5)
|
தொடரும் ஒருபெருச் சாளி ஏறிய |
| |
தோன்றல்
செய்ப்படை-தாங்கவே |
| |
அடல்கு
லாவிய தோகை-வாகனத் |
| |
தரசு
வேல்வலம் வாங்கவே |
| |
படலை
மார்பினிற் கொன்றை மாலிகை |
| |
பதக்க மணியொளி தேங்கவே |
| |
உடைய
நாயகன் வரவு கண்டுகண் |
| |
டுலகெ
லாந்தழைத் தோங்கவே (பவனி) |
(6) |
இடியின் முழக்கொடு படரும் முகிலென |
| |
யானை
மேற்கன பேரிமுழக்கமும் |
| |
துடியின்
முழக்கமும் பரந்து திசைக்கரி |
| |
துதிக்கை
யாற்செவி புதைக்கவே |
| |
அடியர்
முழக்கிய திருப்ப லாண்டிசை |
| |
அடைத்த
செவிகளும் திறக்க மூவர்கள் |
| |
வடிசெய்
தமிழ்த்திரு முறைகள் ஒருபுறம் |
| |
மறைகள்
ஒருபுறம் வழங்கவே. (பவனி) |
(7) |
கனக தம்புரு கின்ன ரங்களி |
| |
ஆசை
வீணை மிழற்றவே |
| |
அனக
திருமுத்தின சிவிகை கவிகைபொன் |
| |
ஆல
வட்டம் நிழற்றவே |
| |
வனிதை
மார்பல குஞ்சம் சாமரை |
| |
வரிசை
விசிறி சுழற்றவே |
| |
தனதன்
இந்திரன் வருணன் முதலிய |
| |
சகல
தேவரும் வழுத்தவே. (பவனி) |