|
பல்லவி
|
(1) |
பவனி
வந்தனரே-மழவிடைப், பவனி வந்தனரே |
|
அனுபல்லவி
|
(2) |
அவனி
போற்றிய குறும்ப லாவுறை |
|
மவுன
நாயகர் எவன நாயகர் |
|
சிவனு
மாய்அரி அயனு மானவர் |
|
கவன
மால்விடை அதனி லேறியே. (பவனி) |
|
சரணங்கள்
|
(3) |
அண்டர்
கூட்டமும் முனிவர் கூட்டமும் |
|
அசுரர்
கூட்டமும் மனிதராகிய |
|
தொண்டர்
கூட்டமும் இமைப்பி லாரெனச் |
|
சூழ்ந்து
தனித்தனி மயங்கவே |
|
பண்டை
நரரிவர் தேவர் இவரெனப் |
|
பகுத்து
நிறுவிய வேளை தொறுந்தொறும் |
|
மண்ட
லீகரை நந்தி பிரம்படி |
|
மகுட
கோடியிற் புடைக்கவே (பவனி) |
(4) |
தடுப்ப தொருகரம்
கொடுப்ப தொருகரம் |
|
தரித்த
சுடர்மழு விரித்த-தொருகரம் |
|
எடுத்த
சிறுமறி பிடித்த தொருகரம் |
|
இலங்கப்
பணியணி துலங்கவே |
|
அடுத்த
ஒருபுலி கொடுத்த சோமனும் |
|
ஆனை
கொடுத்தவி தானச் சேலையும் |
|
உடுத்த
திருமருங் கசைய-மலரயன் |
|
கொடுத்த
பரிகலம் இசையவே. (பவனி) |
(5)
|
தொடரும் ஒருபெருச் சாளி ஏறிய |
|
தோன்றல்
செய்ப்படை-தாங்கவே |
|
அடல்கு
லாவிய தோகை-வாகனத் |
|
தரசு
வேல்வலம் வாங்கவே |
|
படலை
மார்பினிற் கொன்றை மாலிகை |
|
பதக்க மணியொளி தேங்கவே |
|
உடைய
நாயகன் வரவு கண்டுகண் |
|
டுலகெ
லாந்தழைத் தோங்கவே (பவனி) |
(6) |
இடியின் முழக்கொடு படரும் முகிலென |
|
யானை
மேற்கன பேரிமுழக்கமும் |
|
துடியின்
முழக்கமும் பரந்து திசைக்கரி |
|
துதிக்கை
யாற்செவி புதைக்கவே |
|
அடியர்
முழக்கிய திருப்ப லாண்டிசை |
|
அடைத்த
செவிகளும் திறக்க மூவர்கள் |
|
வடிசெய்
தமிழ்த்திரு முறைகள் ஒருபுறம் |
|
மறைகள்
ஒருபுறம் வழங்கவே. (பவனி) |
(7) |
கனக தம்புரு கின்ன ரங்களி |
|
ஆசை
வீணை மிழற்றவே |
|
அனக
திருமுத்தின சிவிகை கவிகைபொன் |
|
ஆல
வட்டம் நிழற்றவே |
|
வனிதை
மார்பல குஞ்சம் சாமரை |
|
வரிசை
விசிறி சுழற்றவே |
|
தனதன்
இந்திரன் வருணன் முதலிய |
|
சகல
தேவரும் வழுத்தவே. (பவனி) |