| 
			
			
			| | 
   
    | 
        
           
            | (பொ-ரை) | (1) கருநிற மேகங்கள் ஒன்று இரண்டு சுருண்டு சுழியெறிவது போல் காட்சியளிக்கின்ற 
              கூந்தல் முடியினாள்; காதுகள் வரை நீண்டு சென்று வியைாடி ஆடவர் நெஞ்சைக் கொள்ளைகொள்கின்ற 
              கெண்டை மீனையொத்த கண்களையுடையாள்; அழகுள்ள முள் முருக்கின் அரும்பை யொத்த 
              மேல் கீழ் இதழினையுடையாள்; அழகிய வில்லைப்போல் வளைந்து மூன்றாம் பிறைத்திங்களைப் 
              போல் ஒளிவிடுகின்ற நெற்றியையுடையாள்; 
 (2) அரம்பை யென்னும் மங்கையின் நாடாகிய விண்ணுலகத்தில் தோன்றும் வான 
              வில்லுங்கூட ஆசை மொழி பேசும்படி அமைந்த கண்களின் புருவத்தையுடையாள்; தன்னைப் 
              பார்க்கின்ற மற்ற ஆடவர் பெண்டிர்களின் அறிவையும் மயக்குகின்ற இறுமாப்புமிக்க 
              மங்கைப் பருவத்தை யுடையாள்; கரும்பின் சாறுபோல் இனிப்புக்கொண்டு அமிழ்தம்போல் 
              (மிக இனிக்கும்) தெளிவாக எடுத்த சொல்லை யுடையாள்; இரைச்சல் இடுகின்ற கடல் 
              அலைகளால் ஒதுக்கப்பட்ட முத்துகளைப் பதித்து வைத்தாலொத்த வரிசையான பற்களை 
              யுடையாள்;
 
 (3) பற்களின் நிற அழகை எட்டிப்பார்ப்பது போல் மூக்கில் புல்லாக்காக இட்ட 
              ஒப்பில்லாத முத்தினை யுடையாள்; திங்களும் பழகத்தக்க ஒளிவடிவில் நிலைத்து 
              அழகு மாறாமல் இருக்கின்ற முகத்தினை யுடையாள்; ஒளிபொருந்திய பல்வகை அணிகளைப் 
              பூண்டு, கொடிகள் சுற்றுகின்ற கமுகினையும் வெற்றி கொண்ட கழுத்தினை யுடையாள்; 
              உலகம் எல்லாவற்றையும் தனக்கு விலைப்பொருளாக மதித்தெழுதச் செய்து, இன்பத்தை 
              நிலைநிறுத்தி எழுதுகின்ற சந்தனக் குழம்பால் எழுதப் பெற்ற எழுதுவரிக் கோலத்தை 
              யுடையாள்;
 
 (4) மணிகள் அழுத்திப் பொன்னாற் செய்த அழகிய வளையல்களை அணிந்துள்ள சிவந்த 
              கைகளையுடைய தன்னிடம் முழுதும் இரவிக்கையால் மூடப்பட்டிருப்பினும் இனிமை தங்கியிருக்கின்ற 
              இரண்டு கொங்கைகளை யுடையாள்; இறைவன் அன்பில் கூடும் எண்ணமுடையவராகிய முனிவர்களின் 
              மனமாகிய கல்லையுங்கூட (கரைந்துருகும்படி) மாற்றுகின்ற அழகுள்ள கொப்பூழையுடையாள்; 
              மேலிடத்தில் நேராகக் கொண்டு ஆடவர் மனத்தைக் தன்பால் அடக்குகின்ற (வயிற்று) 
              மயிரொழுங்கினை யுடையாள்
 
 (5) உடுக்கைக்கும் உள்ளிடம் சிறுத்து ஒருகைப்பிடியளவுக்குள் அடங்குகின்ற சிறிய 
              இடையையுடையாள்; காமனாகிய கொடியவனது அரண்மனைக்குக் கட்டிவைத்துள்ள வாழைமரத்தைப் 
              போன்ற தொடைகளை யுடையாள்; மடிப்பையுடைய அழகிய ஆடைகளை விரித்துக் கொய்து 
              உடுத்த உடையினையுடையாள்; இள அன்னத்தின் நடையைப்பார்க்கினும் மெல்ல நடக்கின்ற 
              நடையை யுடையாள்;
 
 (6) பெரு முழக்கமுடைய கடலிற் பிறந்த தேவாமிர்தத்தைக் கொண்டு உருவாக்கியதைப் 
              போன்ற இன்பஞ் செய்யும் திருவடிவுடையாள்; வீமனாற் செய்யப்படும் உணவு போல் 
              சுவை கொண்ட காதல் ஆசையாகிய பாலுக்கு மேலும் இனிமை கொடுக்கும் சருக்கரையைப் 
              போன்றவள்; பொருந்திய நல்ல மணமுள்ள வல்லிக்கொடியைப் போன்ற வசந்தவல்லியினது 
              இவ் வழகு மிகுதி, அறுபத்து நான்கு சக்தி பீடத்தில் ஒன்றாக இலகும் இத் திருக்குற்றாலத்தில் 
              எழுந்தருளியிருப்பவரான திரிகூடராசப் பெருமானது திருவுள்ளத்தையும் உருகும்படி செய்யும்.
 
 | 
 |   
            | (வி-ரை)
 | 1-6 இக் கண்ணிகள் ஆறும் முடிமுதல் அடிவரை (கேசாதிபாதம்) வருணனையாக வசந்தவல்லி 
              கூந்தல், கண், இதழ், நுதல் போன்ற எல்லா வடிவையும் அழகுறக் காட்டி இவள் அழகால் 
              குற்றாலநார் உள்ளங்கூட உருகுமென்றால் வேறென்ன விளம்புவதென்று ஆசிரியர் கூறி 
              முடிக்கின்றார்.
 
 குழை-காது, சிலை-வில் அரம்பைதேசம்-வானுலகம், கருவம்-செருக்கு; இறுமாப்பு கரும்பு 
              அதன் சாற்றுக்கு ஆகுபெயர். மருந்து-அமிழ்தம், திரை-அலை நிரை-வரிசை, எட்டிப்பார்த்தல்-தலைநீட்டிக் 
              காணுதல், புல்லாக்கு, பற்களுக்கு நேராகத் தொங்கியசைவதை எட்டிப் பார்ப்பது 
              போல் குறித்தார். அழகு குடிகொள்ளுதல்-அழகு கெடாமல் என்றும்ஒரேபடியாக நிலைத்திருத்தல். 
              வல்லி-கொடி, கழுத்தி்ல் பல்வகைச் சங்கிலிகள் பூண்டிருப்பது கமுகில் கொடி 
              படர்ந்திருப்பதுபோல் தோன்றுவதென்றபடி, சகம்-உலகம், இன்பநிலை இடுதல்-இன்பத்தை 
              நிலைத்திருக்கச் செய்தல், தொய்யில்-மார்பினும் தோளினும் கலவைச் சந்தனத்தால் 
              எழுதுகின்ற வரிக்கோலம், செல்லம்-செல்வம், சிறப்பு, கச்சு-இரவிக்கை, ஒல்லுதல்-பொருந்துதல், 
              கருத்தர்-கருத்தினையுடையார், கருத்து-எண்ணம், கல்-கல்போன்ற வலிமை, உரோமபந்தி-மயிரொழுங்கு, 
              அடுக்கு-மடுப்பு, சின்ன-சிறிய; ஈண்டுமெல்லிய, வெடித்தல்-பெரு முழக்கம் வீமபாகம்-வீமனால் 
              செய்த உணவுவகை, மிகச் சிறந்த முறையில் வீமன் சமைப்பான் என்பது பாரதக்கதை, 
              காமமாகிய பால்-காம இன்பத்தின் வகைகள், பிடித்த பொருந்திய; சேர்ந்த, 
              பெருக்கம் ஈண்டு (அழகு) மிகுதி, சத்திபீடம்- சத்திவீற்றிருக்கும் உயிரடம் 
              கச்சுக்கிடக்கினும் என்பதில் கச்சு-கைத்து; கசப்புடையதாகி என்றும் கச்சு, 
              இரவிக்கையென்றும் இரு பொருள் நயம் காண்க.
 | (18) |  வசந்தவல்லி பந்தடித்தல்
 
 விருத்தம்
 
           
            | வித்தகர் 
              திரிகூடத்தில் வெளிவந்த வசந்த வல்லி தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பணைப்பி னாலோ
 நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
 பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே,
 
 
 |   
            | (பொ-ரை) | ( 
              மெய்யறிவினரான திருக்குற்றால நாதரின் திரிகூட மலையையுடைய நகரத்தில் வெளித்தோன்றிய 
              வசந்தவல்லியானவள் தாவுகின்ற விளையாட்டினாலோ; அன்றிப் பெரிய கொங்கைகளின் 
              சுமையினாலோ, சங்கு வளையல்கள் அணிந்துள்ள தன் கைகள் மிகச் சிவப்பு நிறமடைய 
              நான்கு அடிகள் முன்னேறிச் சென்றும், பத்தடிகள் பின்வாங்கிப் போயும் பந்தடித்து 
              விளையாடல் புரிகின்றாள். | 
 |   
            | (வி-ரை) | திரிகூடம்-மூன்று 
              கொடிமுடிகள் ஒன்றாகக் கூடியது. அதனால் பொதிய மலைக்குத் திரிகூடமலை யென்பது 
              பெயராயிற்று, தத்துதல்-தாண்டுதல், பணைப்பு-பருமை; சுமை. நத்து; வலித்தல் விகாரம் 
              பெற்றது. சேப்ப-செந்நிறம் கொள்ள, நாலடி-நான்கு காலின் எட்டுதல் அளவு. ஓங்குதல்-மேலே 
              போதல், வாங்குதல்-பின்னடைந்து போதல். | (19) |  இதுவுமது
 
          கண்ணிகள் 
            | இராகம்-பைரவி | தாளம்-சாப்பு |  
 
 
           
            | (1) | செங்கையில் வண்டு கலின்கலின் 
              என்று செயஞ்செயம் |   
            |  | என்றாட                               இடை |   
            |  | சங்கதம் என்று சிலம்பு புலம்பொட 
              தண்டை |   
            |  | கலந்தாட                              இரு |   
            |  | கொங்கை கொடும்பகை வென்றனம் 
              என்று குழைத்து |   
            |  | குழைந்தாட 
                                         மலர்ப் |   
            |  | பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி |   
            |  | பந்து 
                                             பயின்றாளே; |   
            |  |  |   
            | (2) | பொங்கு கனங்குழை மண்டிய 
              கெண்டை புரண்டு |   
            |  | புரண்டாடக் 
                                        குழல் |   
            |  | மங்குலில் வண்டு கலைந்து கண்டு 
              மதன்சிலை |   
            |  | வண்டோட 
                                         இனி |   
            |  | இங்கிது கண்டுல கென்படும் 
              என்படும் என்றிடை |   
            |  | திண்டாட 
                                          மலர்ப் |   
            |  | பங்கய மங்கை வசந்த சவுந்தரி |   
            |  | பந்து 
                                         
                  பயின்றாளே; |   
            |  |  |   
            | (3) | சூடக முன்கையில் வால்வளை 
              கண்டிரு தோள்வளை |   
            |  | நின்றாடப் 
                                         புனை |   
            |  | பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு 
              பாவனை |   
            |  | கொண்டாட 
                                         நய |   
            |  | நாடகம் ஆடிய தோகை மயிலென 
              நன்னகர் |   
            |  | வீதியிலே 
                                         அணி |   
            |  | ஆடக வல்லி வசந்த ஒய்யாரி |   
            |  | அடர்ந்துபந் 
                                       தாடினளே; |   
            |  |  |   
            | (4) | இந்திரை யோஇவள் சுந்தரி 
              யோதெய்வ ரம்பையோ |   
            |  | மோகினியோ 
                                        மன |   
            |  | முந்திய தோவிழி முந்திய 
              தோகர முந்திய |   
            |  | தோவெனவே 
                                       உயர் |   
            |  | சந்திர சூடர் குறும்பல ஈசுரர் 
              சங்கணி |   
            |  | வீதியிலே 
                                         மணிப் |   
            |  | பைந்தொடி நாரி வசந்தஒய் 
              யாரிபொற் |   
            |  | பந்துகொண் 
                                     டாடினளே. |  |  | 
 |  |