(1) |
மெய்யர்க்கு
மெய்யர் திரிகூடநாயகர் மீதில் மெத்த |
|
மையல்கொண் டேனந்தச்
செய்தியைக் கேளாய்நீ பாங்கி |
|
செய்ய சடையும்
திருக்கொன்றை மாலை அழகும் அவர் |
|
கையில் மழுவுமென்
கண்ணைவிட் டேஅகலாவே; |
(2) |
கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தைநான் கண்டு குளி்ர் |
|
திங்கட் கொழுந்தையும்
தீக்கொழுந் தாக்கிக் கொண்டேனே |
|
சங்கக் குழையாரைச்
சங்க மறுகினிற் கண்டுஇரு |
|
செங்கைக்குள்
சங்கமுஞ் சிந்தி மறுகிவிட் டேனே; |
(3) |
மன்றற் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டு சிறு |
|
தென்றற் குளவி
தினங்கொட்டக் கொட்ட நொந் தேனே |
|
குன்றச் சிலையாளர்
குற்றால நாதர்முன் போனேன் மதன் |
|
வென்றிச் சிலைகொடு
மெல்லமெல் லப்பொரு தானே; |
(4) |
பெம்மானை நன்னகர்ப் பேராச வீதியிற் கண்டுஅவர் |
|
கைம்மானைக் கண்டு
கலையை நெகிழவிட் டேனே |
|
செம்மேனி தன்னிற்
சிறுகறுப் பாரைநான் கண்டுஇப்போ |
|
தம்மாஎன் மேனி
அடங்கலு மேகறுத்தேனே. |
(5) |
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டுசிந்தை |
|
நள்ளிய திங்களை
ஞாயிறு போலக்கண் டேனே |
|
எள்ளள வூணும் உறக்கமும்
இல்லாரைக் கண்டு நானும் |
|
ஒள்ளிய ஊணும்
உறக்கமும் அற்றுவிட் டேனே. |