பல்லவி
|
(1) |
தூதுநீ
சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த்
தூதுநீ சொல்லி வாராய்; |
அனுபல்லவி
|
(2) |
ஆதிநாட் சுந்தரர்க்குத்தூதுபோ னவர்முன்னே; (தூதுநீ)
|
சரணங்கள்
|
(3) |
உறங்க
உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை |
|
மறந்தால்
மறக்கவுங் கூடாது பெண்சென்மம் என்று |
|
பிறந்தாலும்
பேராசை ஆகா தஃதறிந்துஞ் |
|
சலுகைக்
காரர்க் காசை யானேன் இப்போது (தூதுநீ)
|
(4) |
நேற்றைக்கெல்
லாங்குளிர்ந்து காட்டி இன்றுகொதிக்கும் |
|
நித்திரா
பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் |
|
காற்றுக்கு
வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு |
|
மாற்றுமருந்து
முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூதுநீ)
|
(5) |
வந்தால்இந்
நேரம்வரச் சொல்லு வரா திருந்தால் |
|
மாலையா
கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் |
|
தந்தாலென்
நெஞ்சைத்தரச் சொல்லு தராதி ருந்தால் |
|
தான்பெண்
ணாகியபெண்ணை நான்விடேன் என்று |
சொல்லு.
(தூதுநீ)
|