|
பல்லவி
|
| (1) |
தூதுநீ
சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த்
தூதுநீ சொல்லி வாராய்; |
|
அனுபல்லவி
|
| (2) |
ஆதிநாட் சுந்தரர்க்குத்தூதுபோ னவர்முன்னே; (தூதுநீ)
|
|
சரணங்கள்
|
| (3) |
உறங்க
உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை |
| |
மறந்தால்
மறக்கவுங் கூடாது பெண்சென்மம் என்று |
| |
பிறந்தாலும்
பேராசை ஆகா தஃதறிந்துஞ் |
| |
சலுகைக்
காரர்க் காசை யானேன் இப்போது (தூதுநீ)
|
| (4) |
நேற்றைக்கெல்
லாங்குளிர்ந்து காட்டி இன்றுகொதிக்கும் |
| |
நித்திரா
பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் |
| |
காற்றுக்கு
வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு |
| |
மாற்றுமருந்து
முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூதுநீ)
|
| (5) |
வந்தால்இந்
நேரம்வரச் சொல்லு வரா திருந்தால் |
| |
மாலையா
கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் |
| |
தந்தாலென்
நெஞ்சைத்தரச் சொல்லு தராதி ருந்தால் |
| |
தான்பெண்
ணாகியபெண்ணை நான்விடேன் என்று |
சொல்லு.
(தூதுநீ)
|