(1) |
ஞானிகளும்
அறியார்கள் சித்ரநதி மூலம் |
|
நானறிந்த
வகைசிறிது பேசகேள் அம்மே |
|
மேன்மைபெறுந்
திரிகூடத் தேனருவித் துறைக்கே |
|
மேவுமொரு
சிவலிங்கந் தேவரக சியமாய் |
|
ஆனதுறை
அயனுரைத்த தானம்அறி யாமல் |
|
அருந்தவத்துக்
காய்த்தேடித் திரிந்தலையுங் காலம் |
|
மோனவா
னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும் |
|
முதுகங்கை
ஆறுசிவ மதுகங்கை ஆறே; |
|
|
(2) |
சிவமதுகங் கையின்மகிமை புவனமெங்கும் புகழுஞ் |
|
செண்பகா
டவித்துறையின் பண்புசொல்லக் கேளாய் |
|
தவ முனிவர் கூட்டரவும்
அவரிருக்கும் குகையும் |
|
சஞ்சீவி
முதலான விஞ்சைமூ லிகையும் |
|
கவன சித்தர்ஆதியரும்
மவுனயோ கியரும் |
|
காத்திருக்குங்
கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே |
|
நவநிதியும் விளையுமிடம்
அவிடமது கடந்தால் |
|
நங்கைமார்
குரவையொலிப் பொங்குமா கடலே |
|
|
(3) |
பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும் |
|
பொருந்து
சித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்; |
|
கங்கையென்னும்
வடஅருவி தங்குமிந்த்ர சாபம் |
|
கலந்தாடிற்
கழுநீராய்த் தொலைந்தோடும் பாபம் |
|
சங்கவீ தியிற்பரந்து
சங்கினங்கள் மேயும் |
|
தழைத்தமதிட்
சிகரமெங்கும் கொழுத்தகயல் பாயும் |
|
கொங்கலர்செண்
பகச்சோலைக் குறும்பலா ஈசர் |
|
குற்றாலத்
திரிகூடத் தலைமெங்கள் தலமே; |
|
|
(4) |
மன்றுதனில் தெய்முர சென்றுமேல் முழங்கும் |
|
வளமைபெறுஞ்
சதுரயுகம் கிழமைபோல் வழங்கும் |
|
நின்றுமத கரிபூசை
அன்றுசெய்த தலமே |
|
நிந்தனைசெய்
புட்பகந்தன் வந்தனைசெய் தலமே |
|
பன்றியொடு வேடன்
வலஞ் சென்றதிந்தத் தலமே |
|
பற்றாகப்
பரமர்உரை குற்றாலத் தலமே |
|
வென்றிபெறுந்
தேவர்களுங் குன்றமாய் மரமாய் |
|
மிருகமதாய்த்
தவசிருக்கும் பெரியதலம் அம்மே! |