(1) |
குற்றாலர்
கிளைவளத்தைக் கூறக்கேள் அம்மே |
|
குலம்பார்க்கில்
தேவரினும் பெரியகுலங் கண்டாய் |
|
பெற்றதாய்
தந்தைதனை உற்றுநீ கேட்கிற் |
|
பெண்கொடுத்த
மலைஅரசன் தனைக்கேட்க வேணும் |
|
உற்றதொரு
பனிமலையின் கொற்றவேந் தனுக்கும் |
|
உயர்மதுரை
மாறனுக்கும் செயமருகர் கண்டாய் |
|
வெற்றிபெறும்
பாற்கடலிற் புற்றரவில் உறங்கும் |
|
வித்தகர்க்குக்
கண்ணான மைத்துனர்காண் அம்மே |
|
|
(2) |
ஆனைவா கனத்தானை வானுலகில் இருத்தும் |
|
ஆகுவா
கனத்தார்க்கும் தோகைவா கனர்க்கும் |
|
தானையால் தந்தைகா
லெறிந்தமக னார்க்குந் |
|
தருகாழி
மகனார்க்குந் தகப்பனார் கண்டாய் |
|
சேனைமக பதிவாசல்
ஆனைபெறும் பிடிக்கும் |
|
தேனீன்ற
மலைச்சாரல் மானீன்ற கொடிக்கும் |
|
கானமலர் மேலிருக்கும்
மோனஅய னார்க்குங் |
|
காமனார்
தமக்கும்இவர் மாமனார் அம்மே! |
|
|
(3) |
பொன்னுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தவர்க்கும் |
|
பூதலத்தின்
முனிவருக்கும் பாதலத்து ளார்க்கும் |
|
அன்னவடி வெடுத்தவர்க்கும்
ஏனஉரு வார்க்கும் |
|
அல்லார்க்கும்
முன்னுதித்த செல்வர்காண் அம்மே |
|
முன்னுதித்து வந்தவரைத்
தமையனென உரைப்பார் |
|
மொழிந்தாலும்
மொழியலாம் பழுதிலைகாண் அம்மே |
|
நன்னகரிற் குற்றால
நாதர்கிளை வளத்தை |
|
நானுரைப்ப
தரிதுலகந் தானுரைக்கும் அம்மே! |