(பொ-ரை) |
(1)
ஐயே! பறவைகள் பலவகையாகப் பல்லிடத்தும் இறங்குகின்றன
(2) சந்தனச் சோலையிலும், செண்பகச் சோலையிலும், குழல்வாய் மொழியம்மை
கோயிலின் கட்டளைக்காக விடப்பட்ட (3) மேகங்கள் நீருண்ணும் செங்குள மேலவாரச் செய்கள், காடுவெட்டிச்
செய், நீடு சுண்டைக் காட்டுச் செய், சிறப்புப் பொருந்திய பேட்டைக்
குளமுடைய காங்கேயன் செய், ஸ்ரீகிருஷ்ணன் மேட்டுச் செய், முனிக்குருக்கள்
செய், ஏரிவாய்ச் செய், சீவலப்பேரிச் செய், வடகால் செய், இராச
குலராமன் செய், கண்டுகொண்டான் செய், மேலைமாரிப் பற்றுச் செய்,
கீழை மாரிப்பற்றுச் செய், சன்ன நேரிப் பற்றுச் செய், சாத்தான்
நேரிப்பற்றுச் செய், இவற்றை யெல்லாம் சூழ்ந்து, (பறவைகள் இறங்குகின்றன
ஐயே!)
(4) பாரைக் குளம், தெற்கு மேல் வழுதிக்குளம், பாட்டப் பெருங்குளம்,
செங்குறிச்சிக் குளம், ஊருணிச் செய், திருப்பணி நீளம், உயர்ந்த புளியங்குளம்,
துவரைக் குளம், ஏரிக்குளம், மாரன் மத்தளப்பாறை, வழிமறித்தான்குளம்,
ஆலடிப்பற்றுச் செய், ஆத்திமலர் அணிந்த குற்றாலநாதர் தோட்ட நெடுஞ்செய்
அபிடேகப் பேரி, கணக்கன் பற்றுச் செய், இவற்றிலெல்லாம் (பறவைகள்
இறங்குகின்றன ஐயே!)
(5) குற்றாலநாதர் நம்பியார் திருத்துச்செய், அப்பாய் ஒரு தாதன் குற்றாலப்
பேரிச் செய், அழகிய புலியூர், இலஞ்சி, மேலகரம், செங்கோட்டை, சீவலப்பேரி,
நல்லூர், சிற்றம்பலம், தூய குன்றக்குடி, வாழவல்லான்குடி, சுரண்டையூர்
முதல் உட்கிடைகள் முதலியவற்றிலெல்லாம் வட்டமிட்டுக் கொண்டு கொய்யப்படுகின்ற
மலர்மாலையணிந்த இலஞ்சிக் குமரப்பெருமானாகிய குருநாதர் விளையாடுகின்ற
திருவிளையாட்டச் செய்யிடத்தும் (பறவைகள் இறங்குகின்றன ஐயே!)
|
|
(வி-ரை) |
1-5: சாயினும்-கீழே இறங்குகின்றன.
பற்று-நன்செய். வழுதி-பாண்டியன்; திருத்து, பற்று, பேரி விளையாட்டம்
முதலியன வயல்களைக் குறிக்கும் பெயர்கள். குளம், நீளம் முதலியனவும் அன்னவே!
இக் கண்ணியில் வருகின்ற சாயினும் என்பது, சாய்கின்றன, இறங்குகின்றன
என்னும் பொருளது; மரூஉமொழி அல்லது சேரிமொழியெனக் கொள்க. |
(91) |