| (1) |
வாடை
மருந்துப் பொடியும் அம்மியூர் |
| |
மரப்பாவை
பின்தொடர மாயப் பொடியும் |
| |
கூடியிருக்க
மருந்தும் இருபொழுதும் |
| |
கூடியிருப்
பார்களைக் கலைக்க மருந்தும் |
| |
காடுகட்டக்
கினிக்கட்டு குறளி வித்தை |
| |
கண்கட்டு
வித்தைகளும் காட்டித் தருவேன் |
| |
வேடிக்கைக்
காம ரதிபோல் திரிகூட |
| |
வெற்பிலுறை
சிங்கிதனைக் காட்டாய் ஐயே!
|
| (2) |
மலையைக்
கரையப் பண்ணுவேன் குமரிகட்கு |
| |
வாராத
முலைகளும் வரப்பண்ணுவேன் |
| |
முலையை
ஒளிக்கப் பண்ணுவேன் ஒளித்தபேர்க்கு |
| |
மோகினி
மந்திரஞ்சொல்லி வரப்பண்ணுவேன் |
| |
திலக
வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் |
| |
தெரியாமற்
போகவரச் சித்தும் அறிவேன் |
| |
கலக
மதனப் பயலை என்மேற்கண் |
| |
காட்டிவிட்ட
சிங்கிதனைக் காட்டாய் ஐயே!
|