|
(1) அடி சிங்கி! வள்ளிக் கொடிமேலே
துத்திப் பூப் பூத்ததுபோல ஏதோ காதில் அணிந்திருக்கின்றாயே அஃதென்னடி!
வங்காளத்தார் இட்ட அழகுள்ள கொப்பு அடா, சிங்கா.
(2) அடி சிங்கி! கள்ளிப்பூ பூத்ததுபோல
நீளமாக இருப்பது வியப்புக்குரிய தன்றோ?
தெற்கே வள்ளியூரார் என் குறிக்காகச்
செய்துகொடுத்து மாணிக்கக்கல் பதித்த தண்டொட்டியடா! சிங்கா!
(3) அடி சிங்கி! அழகுள்ள குமிழமலரையொத்த
உன் மூக்கின்மீது புன்னையரும்புபோல ஏதோஒன்று அணிந்திருக்கின்றாயே அஃதென்னடி!
சிங்கா! அது, கடலினடியிலே சலாபத்திலே குளித்தெடுத்த முத்து மூக்குத்தியடா!
நன்றாகப பார்.
(4) அடி சிங்கி! செருகி முடித்த
உன் கூந்தலில் தூக்கணங் குருவிக்கூடுபோல் இருக்கின்றதே அஃது ஏதடி சொல்லு?
அழகிய ஆழ்வார்திருநகரிலுள்ளவர்கள் தந்த குப்பி (தலைச்சூளாமணியும், மயிர்மாட்டியுமடா
சிங்கா!)
(5) உன்னுடைய பொன்னொளி வீசுகின்ற
உடம்பெங்கும் பளிச்சுப்பளிச் சென்று மின்னலொளி வீசுவதற்குக் காரணமென்னடி
சிங்கி?
நான்பூண்டஇந்த அழகுள்ள நகைகளிற் பதித்த மாணிக்கக் கற்களின் ஒளியடா
கிங்கா!
(6) இத்தகைய அணிகளை நீ அணிவதற்கு
உன்னால் தாங்க முடியுமோ சிங்கி? உலகில் திருக்குற்றாலநாதருக்கும் என்போன்றமங்கையர்களுக்கெல்லாமும்
தாங்கத்தக்கது தானடா சிங்கா!
(7) மலையை ஒத்த உன் கொங்கைகளின்
பெருக்கத்தைக் கண்ணால பார்த்தால் உன் கொடி போன்ற நுட்ப இடை தாங்குமா?
(ஒடிந்து போகுமன்றோ?) சிங்கி?
கரைக்கொடிக்கு அதன் காய் கனமாகவா தோன்றும்?
தோன்றாதடா சிங்கா! (கொடிக்குக் காய் கனமா? என்னும் பழமொழி கூட நீ கேட்டதிலையோ?)
(8) முன் உன்னிடத்தில் காணக்கிடைக்காத
வளைத்துப் பேசுகின்ற வெட்டுத் தட்டுப் பேச்சுகளெல்லாம், இப்போது நீ எங்கே
படித்து்கொண்டு வந்தாயடி சிங்கி?
நாடுகளில் நல்லோர் பெரியோர்களைக் கண்டு
வருபவர் எவர்க்கும் நல்ல தன்மைகளெல்லாம் தானே கிட்டுமடாசிங்கா!
(9) கூடையில் அடங்கிக் கிடக்கின்ற
நாகப்பாம்பு போன்ற உன் கடிதடத்தைப் பிடித்து ஆடச்செய்ய வேண்டாவோ சிங்கி?
வெட்டவெளிப் பொட்டலிலே நல்ல சாதிப்பாம்பு ஆடுமோ அடா? (ஆடலாமா அடா?)
சிங்கா.
(10) என்னைக் கட்டித்தழுவிக்கொண்டு
சிறிதுநேரம் முத்தங் கொடுப்பதற்கு வா,சிங்கி!
நல்ல பட்டப்பகல் நேரத்தில்
நான் உன்னிடம் வந்து நெருங்கி முத்தங் கொடுப்பேனோ சிங்கா!
(11) என்னை மோதுவதற்குரிய மேலாடை
போர்த்த உன் கொங்கைகளாகிய யானைகளை யான் என் தலையால் மோதவா சிங்கி!
உனக்குக் காமக்கிறுக்கு அடக்க முடியாவிட்டால் மண்ணில் விழுந்து முட்டடா சிங்கா!
(12) உன் சீலை உடுத்துள்ள கட்டினைச்
சிறிது அவிழ்க்க வா சிங்கி!
வீண்தனமாக நாலுபேர் போகிற வருகிற இடத்தில்
என்மானத்தைக் கெடுக்காதேயடா சிங்கா!
(13) உன் கால்களைப் பிடித்துவிட்டு
உன் தொடைக்குள்ளிடமுள்ள கடிதடத்தை குத்தவேண்டாவா சிங்கி!
மனவொருமை கொண்டுபோய்ப்
பூனைகளைப் பார்த்துக் குத்தடா சிங்கா!
(14) உன் நல்ல வாயின் இதழ்களின்
சுவைக்கு என் நாக்கு படபடவென்று துடிக்கின்றதே சிங்கி!
உன் நாக்குக்கு நல்ல சுவையாக இருப்பது, மாலை நேரத்தில் இறக்குகின்ற கள்ளுதானடா சிங்கா!
(15) நாம் ஒன்றாகத் தழுவிக்கொண்டு
படுக்கைகொள்வதற்கு மறைவான இடம் பார்த்துவிட்டு வரவா சிங்கி!
பெரிய கொக்குகளைப் பார்த்துப் பிடிப்பதற்குக் குறிப்பான (நல்ல) இடத்தைக் கண்டு வா சிங்கா!
(16) நீ வியப்பானவள், உன்னை
யாராலும் வெற்றி கொள்ள இயலாதடி சிங்கி!
அதற்கும் ஐயமாகவா இருக்கின்றது?
நீ அறிந்துகொள்ள வேண்டினால் உன் தலைப்பேனைக் கேட்டால்கூட உண்மையைச் சொல்லுமடா!
வேறே யாரிடமுமா கேட்கவேண்டும் சிங்கா? அதையே கேளடா!
(17) இந்தத் தென்னாடெங்கும்
உன்னைக் காணாமல் தேடித்தேடி அலைந்தேனே! (உனக்கு நன்றி இருக்கிறதா? அன்புதான்
இருக்கிறதா?) ஏடி சிங்கி!
அதன்பின் இந்த நாட்டைக் கண்டுபிடித்து என்னை நீ
எந்த விதத்தில் கண்டுகொண்டாயடா சிங்கா!
(18) இந்த நல்ல நகராகிய திருக்குற்றாலத்தில்
எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதரை (வணங்கி உன்னைக் கண்டு பிடிக்க
அருள் தர வேண்டுமென்று) நான் வேண்டிக் கொண்டேனடி சிங்கி!
அவ்வாறானால் மணியையுடைய நாகப்பாம்பையணிந்த திருக்குற்றாலநாதப் பெருமானைப்பாடி வணங்கிக்கொள்வோமடா
சிங்கா!
(19) அவ்வாறானால் நம்முள் யார்பாடுவது?
யார் ஆடுவது சொல்லடி சிங்கி!
(நீ ஆடவேண்டா) பாடினால் மட்டும் போதும்; நான்
அப்பாட்டுக் கேற்ப ஆடுவேனடா சிங்கா!
(20) அடி சிங்கி!- உன் ஆட்டத்தைக்
கண்டால்-அடிபாவி!-என் உயிர் தரிக்குமா? சொல்லடி சிங்கி! (நீ ஆட்டம் போடுவேன்
என்கிறாயே!)
உலகத்தில் சோறு சமைக்கும்வரை பசியோடு காத்திருந்தவர்கள்
அது சூடு ஆறும் வரை பொறுத் திருக்கமாட்டார்களா (இஃது உனக்குத் தெரியாதா?
|