|
(1) வெற்றி பொருந்திய மூன்றாம்
பிறையையணிந்த திருச் சடைமுடியை உடையவனை திருக்குறும் பலா மரத்தடியில் எழுந்தருளியிருப்ப
வனை, வெற்றியுடைய மழுப்படை கொண்டவனை எருது ஊர்தி உடையானை, நான்வாழ்த்துகின்றேன்.
(2) தந்தையில்லாத அருட்செல்வனை,
(நல்ல மகனை) பெரிய இமயமலை யரசனுக்கு மருமகனை, மறைகள் முழங்குகின்ற சங்க
வீதிஉடையவனை அந்தணனை, நான் வாழ்த்துகின்றேன்.
(3) யானை முகத்தையுடைய ஒப்பற்ற
உலகத் தலைவனான பிள்ளையார்ப் பெருமானை, இனிமைமிக்க இலஞ்சி நகரில் எழுந்தருளியிருக்கின்ற
முருகவேளைப் புதல்வர்களாகப் பெற்றாரென்னும் பெருமைக்குரிய முதல்வனை, மறைகளைத்
தந்தவனை, நான் வாழ்த்துகின்றேன்.
(4) வேள்வித் தீயிடத்தே பறிகொடுத்துவிட்ட
அழகிய தலைக்காக நல்ல ஆட்டுத்தலையைத் தன்மாமனாகிய தக்கனுக்கு தான் கொடுக்கும்
பரிசிற்பொருளாக ஒட்டவைத்துதவிய பெரிய நிலைபெற்ற தலைவனாகிய திருக்குற்றாலநாதனை
நான் வாழ்த்துகின்றேன்.
(5) மன்மதனுக்கும் மலரில் வாழும்
நான்முகனுக்கும் கட்டழகுவாய்ந்த தெய்வயானை அம்மையார்க்கும், மாமனென்று கூறி
உலகம் போற்றும்படியான அருட்கொடையாளனை நான் வாழ்த்துகின்றேன்.
(6) நீண்ட மூவுலகங்களையும் தன்
திருவடிகளால் அளந்த நெடிய திருமாலும், நான்முகனும் தேடியலைந்தும் காணுதற்குரிய
திரிகூடமலையில் எழுந்தருளியிருக்கின்ற அருட்செல்வனை நான் வாழ்த்துகின்றேன்.
(7) சித்திர நதியைத் தனக்குரிமையைாகப்
பெற்றவனை, தேனருவிப் பெருக்கத்தைப் பெற்றவனை, சித்திரசபையில் திருநடஞ்செய்வோனை,
என்றும் அழியாது நிலைபெற்ற திருக்குற்றால நாதனை, நான் வாழ்த்துகின்றேன்.
(8) நாகப்பாம்பை அணியாகப் பூண்டவனை,
தன் அடியார்களையெல்லாம் ஆட்கொண்டருளியவனை, எக்காலும், மாறாது திருநடஞ்
செய்வோனை எல்லோரையும் ஆண்டருள்கின்ற திருக்குற்றாலநாதனை நான் வாழ்த்துகின்றேன்.
(9) தானே திருமாலுடன் நான்முகனாகி
உருத்திரனாகி இவர்களோடு ஒன்றுகலந்த திரிகூடமலையிலெழுந்தருளியிருக்கின்ற மேலானதற்கும்
மேலாகியவனை, எட்டுத்திசைகளையுமே தனக்கு ஆடையாக உடைய திருக்குற்றாலநாதப்
பெருமானை நான் வாழ்த்துகின்றேன்.
(10) சிற்றாற்றினது கரையுடையவனை,
திருக்குற்றாலமலையை யுடையவனை, திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருப்பவனை,
தக்கணாமூர்த்தியாக உள்ள மேலானவனாகிய திருக்குற்றால நாதப் பெருமானை, நான்
வாழ்த்துகின்றேன்.
(11) மதங்கொண்ட யானையை உரித்தவனை,
மூன்றாம்பிறையைத் திருச்சடையில் கொண்டிருப்பவனை, வடஅருவித் திருத்துறையுடையவனை
வேதங்கட்குரியவனாகிய திருக்குற்றாலநாதப் பெருமானை, நான் வாழ்த்துகின்றேன்.
(12) முதல்முதல் வேதங்களை அருளிச்செய்தவனை,
எல்லா உயிர்கட்கும் முன்தோன்றியவனை, குழல்வாய்மொழியம்மையார் சேர்ந்திருக்கின்ற
இறைவனாகிய திருக்குற்றாலநாதப் பெருமானை நான் வாழ்த்துகின்றேன்.
|