பக்கம் எண் :

12

மோகினி விரக வேதனையால் மன்மதனைக்
குறித்து பாடல்
கண்ணிகள் மன்மதோ பாலம் பனம்.

     ___

 ராகம்-பந்துவராளி]                            [தாளம்-மிஸ்ரம்

    

    பிரபவனாகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற
               மன்மதா-இன்று
     பேதையென் றென்னைப் பரிதாபி யாக்கலென்
               மன்மதா
     பரவுங் கடலினைத் துந்துபி யாக்கொண்ட
               மன்மதா-நீயும்
     பரவைமார் களுக்குவி ரோதியா யினதென்ன
               மன்மதா
     வானின்மேற் கோடுந்துன் மதியைக் குடையாக்கி
               மன்மதா-காற்றாம்
     வடக்கோடுந் தேர்கொண்டா யிதுவென்ன காலயுத்தி
               மன்மதா
     மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ
               மன்மதா-யார்க்கும்
     விகுருதியா காதிருந்தான் மிகவும் ஜயமாமே
               மன்மதா
     தேனார் மலரம்பா லானந்த மடைகின்றாய்
               மன்மதா-சீறும்
     திறவம்பொன் றுளதாயிற் பிரமாதி யாவையே
               மன்மதா
     மானோர் கறமுற்ற ஈசுவரன் முன்னாளின்
               மன்மதா-உன்னை
     வாட்டிய காலையிற் காட்டுங் குரோதியல்லை
               மன்மதா