ஸ்வரம்.
பா த பாத பமா ப - கா ம ப தா - ம பா த நி பா ச நி
தபம - பா
ம ப த நி தா - சநி தா - ரிசநி பாத - சா நி த ம க (கந்த)
மா க சா - ரி க ம ப த
___
மதனவல்லி குயிலையும் மாலைப்பொழுதையும்
நோக்கிப் பாடுகிறாள்.
___
ராகம்-சங்கராபரணம்.] கண்ணிகள். [தாளம்-மிஸ்ரம்
ஏற்ற மன்மதன் காளமே-இன்று
எனக்கு நீயொரு காளமே
போற்றி டந்திமுன் மாலையே-மிகப்
போதச் செய்வதென் மாலையே
தோற்று சோலைநல் லலர்களே-நாடித்
தூற்று வார்சில ரலர்களே
ஆற்றல் கொண்டிரை வேலையே-மாதர்க்
கல்லல் செய்வது வேலையே
ஓத வேலையுள மச்சமு-மிக
உற்ற வென்றுமுள மச்சமே
மீது சொறிடு வங்கமே-நின்று
மெலியு மென்வடி வங்கமே
கோதில்மாதவள வன்னமே-இங்குக்
கொண்டி லேனிவள வன்னமே
மாதண் போதுறு காசையே-சரப
மன்னர் மேலெனக் காசையே
|