பக்கம் எண் :

27


     சகியேயென் றேன்சற்றுச் சகியேயென் றாளவள்வஞ்
     சகியேயிப் படியென்னைத் தவிக்கவிட்டுச் சென்றாள்
     மகிபாலன் சரபோஜி மன்னன் றனக்கிசைந்தால்
     வருவான் வரச்சொல்வான் மாலையா கிலுங்கொடுப்பான் (இன்னும்)

___
 

  சகி வசனம்:- மதனவல்லி போனவள் வருமுன்னம் நீ இவ்வாறு
  வேதனையடைவது உனக்கழகாகாது எப்படியும் அவள் உன்மனோ பீஷ்டம்
  பூர்த்தியாகும் மார்க்கம் தேடியே திரும்புவாள் வருந்தாதே

  மோகினி வசனம்:- சகியே! காமன் கணையால் வருந்தும் என்
  வருத்தத்தை அவரறியச் சொல்லி இணங்கச் செய்குவாளோ ஏதோ
  தெரியவில்லையடி.

  சகி வசனம்:- அம்மா யாதொன்றுக்கும் கவலைப்படவேண்டாம். போனவள்
  ஜெயத்துடனே திரும்புவாள். வா. நாம் செல்லுவோம்.

இருவரும் உள்ளே செல்ல
காட்சி முடிவு,

___

காட்சி - V.
குறத்தி பிரவேசம்.

___


         குறத்தியின் வர்ணனை நேரிசை ஆசிரியப்பா.

        

         இப்படி யிவர்க ளிருந்திடு காலையில்
         மைப்படி விழியளோர் மலைக்குற மடந்தை
         மும்மதக் களிற்றின் முகபடா மென்ன
         வெம்முலைத் தடத்தின் மேற்கச் சணிந்து
         மதன்கொலு மண்டபம் வளைத்திடு திரைபோல்
         விதமுறு சித்திர மென்றுகி லுடுத்துப்