பக்கம் எண் :

51

         நீனிலங்கொள் சரபோஜி மன்னவர் வாழ்
             தஞ்சைவள ரம்மே உன்றன்
         நீண்மலர்க்கை தன்னையிங்கே நீட்டுகுறி
             பார்த்துரைக்க வம்மே

___
குறத்தி குறிசொல்ல ஆரம்பிக்கிறாள்.
___
குறத்தி பாட்டு.

 ராகம் - சாரங்கா]         கண்ணிகள்.         [தாளம் - திச்ரம்

    

     உள்ளபடி குறியுனக்குக் கூறிடுவே னம்மே-முன்னம்
         ஒரு சிறங்கைக் கஞ்சிபசி யாறிடவா-ரம்மே
     பிள்ளைதலைக் கொருகரண்டி யெண்ணெயூற்றி டம்மே-அந்தப்
         பிள்ளையார்க்குப் படைத்தவெலா மெடுத்துதவிங் கம்மே
     தள்ளவொண்ணா வெற்றிலைபாக் கித்தனைதா வம்மே-கௌளி
         சத்தமிட்டுன் வலப்புறத்திற் கத்துதல்கே ளம்மே
     கள்ளமில்லாச் செல்வமிக வருகுதுபா ரம்மே-அங்கோர்
         காரிகைதான் வீதியில்வந் தேனெனலோ ரம்மே
     கந்தனுக்கு படைத்ததினை மாவையுத வம்மே உன்றன்
         கையதனால் வைத்தநிறை நாழியுநல் கம்மே
     இந்தவகை யெலாமெங்கட் கீந்திடுத லம்மே-பாரில்
         எங்குமுள்ள முறையமைதா மின்றைக்கல்ல வம்மே
     சுந்தரமார் நின்கையை நீட்டிடுமுன் னம்மே-குறி
         சொல்லுசொல்லென் றாந்தைபல்காற் சொல்லுதல்கா-ணம்மே
     சந்ததமுஞ் செம்பொன்மழை பொழிந்துமகிழ்ந் தம்மே நாளும்
         தஞ்சையில்வாழ் சரபமன்ன ரருளுனக்குண் டம்மே

___