கனத்திடு கீர்த்திச் சரபோசி மன்னர்
கவின்பெறுந் தஞ்சை மாநகரில்
அனப்பெடை போல வருகுறக் கொடியே
யகத்துநான் குறித்த தோர்ந் திசையே
___
குறத்தி தெய்வங்களை வேண்டுதல்.
நேரிசை ஆசிரியப்பா.
___
ராகம்-தோடி.
தலமிது புரந்திடுஞ் சரபோஜி மன்னர்
நலனுறு மதிகொடு நாளும் பணிந்திடச்
சுத்தமார் தஞ்சைத் தொல்பெரும் பதியில்
உத்தம வாலயத் துறை பெருவுடையாய்
பிறைநுதற் சிற்றிடைப் பெரியநாயகியே
ராகம்-காம்போதி.
நிறைமலர்க் கோதை நிமலிகா மாட்சி
தென்றிரு வீதி திகழ்ந்திடுங் காளி
வென்றிகொள் குணபால் வெள்ளைப் பிள்ளையே
ஆனந்த வல்லி யருட்கனு கூலா
ஈனந் தவிர்த்திடு மிரட்டைப் பிள்ளையார்
ராகம்-அட்டாணா.
சரவண பவனே சத்தகன் னியர்காள்
வரமிக வுதவும் வள்ளிநா யகியே
எக்கலா தேவி யிறைஞ்சினே னுங்களை
மிக்கவுன் மகிழ்வொடு மேவியென் முன்னின்
றிந்தமெல் லியலா ளெண்ணிய வெண்ணம்
|