சரணங்கள்.
தாளத் தனத்தைப் பார்க்க மேலே கலையைநீக்கச்
சற்றே தொடுவே னாசை கொண்டு-கையைத்
தள்ளிவிடு வாளொரு கிள்ளுமிடு வாள்கன்னந்
தன்னிலவள் பின்னுமது கண்டு-அவள்
வாள்விழியால் மதனுக் கென்னைக் காட்டுவாள்-அவன்
வன்கணையி னாலுடலை வாட்டுவாள் காம
வன்னிதனை முன்னியெழ மூட்டுவாள்-கிட்ட
வாவெனச்செவ் வாய் மலர்த்தே னூட்டுவாள்-அந்த
வங்கணச் சிங்கிதன் கொங்கைத் துணை-யெண்ணி
மனமீங் குருகுது-தரு
மயலோ பெருகுது-ஒரு
வகையாய் வருகுது-பஞ்ச
வன்னக் கிளியையின்சொ லன்னப் பெடையை யென்றன் (வஞ்சியை)
பந்துவராளிபுன் னாகவராளி
பைரவி தோடியிற் பாடுவாள்-பின்பு
பரிவுதர வெழுந்து தெரிவுபெற மகிழ்ந்து
பழகு முபரியிற் கூடுவாள்-மிக
விந்தைவிந்தை யாகப் பேச்சுப் படிப்பாள்-கொம்பின்
மேவுமயில் போற்சுழன்று நடிப்பாள்-என்கை
வெள்ளிலைவாய் கொள்ளத்துடி துடிப்பாள்-சுரத
வித்தையினை முற்றுமங்கே முடிப்பாள்-ஐயே
மெய்யாகச் சொல்லுறேனந்த வொய்யாரக்-காரிமதன்
மின்னின் மிஞ்சுவாள்-மருவப்
பின்னுங் கெஞ்சுவாள்-இந்த
வண்ணங் கொஞ்சுவாள்-மானின்
மிகவுங் குதிப்பள்பேணித் தகவுந் துதிப்பளந்த (வஞ்சியை)
|