பக்கம் எண் :

68

     குடக்கி னுயர்நேரி யடுக்க லிடையென்னை
         நிறுத்தி யவளிந்த நெறிக்கண் வந்தாள் சொல்லக்   (கேளடையே)

___
சிங்கியைக் காட்டுவதாகக் குளுவன் சொல்லும்
வெண்பா.

___

     சொன்னவடை யாளந் துலங்கவந்தித் தஞ்சையினோர்
     கன்னி யிருக்கின்றாள் காட்டுகின்றேன்-அன்னவளைக்
     காட்டினா லேயெனநீ கைக்கூலி தந்திடுவாய்
     ஈட்டமுறச் சிங்கா வெனக்கு

___
சிங்கன் குளுவனிடம் சிங்கியிருக்குமிடத்தைக் காட்டும்
படியாக வருந்திக் கேட்டுக்கொள்ளல்.

___

 ராகம்-நாதநாமக்கிரியை]                        [தாளம்-திச்ரம்

பல்லவி.

         காட்டி விடையே சிங்கியைக்
         காட்டி விடையே

அனுபல்லவி.

         நாட்டி லுயர்சோழ நாடு புரந்திடும்
         நரபதி சரபோஜி மகராஜர் நகரினில்                  (காட்டி)

சரணங்கள்

         ஆயிரம் பெண்களைக் கூடினா லுங்காமம்
             அடங்கா திருக்க மருந்து தருகிறேன்