பக்கம் எண் :

7

மகாராஜா பவனிவருகிறபோது சகிகளுடன்
மோஹினி ஊர்வலத்தைக் கண்ட செய்தியைக்
கூறுகிறாள்

---

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.


    தரணிபுகழ்ந் திடுந்தஞ்சைச் சரபநரேந் திரன்பவனி தன்னைக்கண்டு
    வரியளிசூழ் மலர்க்கூந்தன் மதனவல்லி யெனுமொருமின் மருகினூடே
    பெருமயலுங் கிறுகிறுப்புங் கொண்டந்த மன்னவனைப் பின்றொடர்ந்து
    மருவுதற்குக் காதல்கொண்ட தகைசொல்வே னெவர்களுக்கும்                                                 வகைசொல்வேனே

காட்சி முடிவு.
___

காட்சி II.
சகிகள் தோன்றி பவனிவரும்போது மகாராஜாவைக்
கண்டு காமுற்ற தலைவி மதனவல்லியை வர்ணித்தல்.

___
சகிகள் பாட்டு.

 ராகம் - பிலஹரி]                           [தாளம் - மிச்ரம்

    அந்த மதனவல்லி வண்டைநான் கொண்டிடச்செய் யோதியாள் பாரில்
    அங்கனையார் தங்களினுத் துங்கமுறு பதுமினிச் சாதியாள்

தீர்மானம்.

        தாந் தத்தீ - தா - தீ - தீந் தக்க
        தாந் தத்தீ - தா - தீ - தீந்தக்க தாந் தத்தீ
        தா - தாந்தத்தீ - தீந்தக்க - தாந்தத்தீ
        தா - தாந்தத்தீ - தீந்தக்க (துரிதகாலம், 2 தடவை)